ஓவியாவின் வீடியோ பணத்திற்கு விற்கப்பட்டதா? ஓட்டலில் காதலனுடன் நடந்த சண்டை.. பயில்வான் சொன்ன தகவல்!
சென்னை: இணையத்தில் நடிகை ஓவியாவின் ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோ பெரும் புயலை கிளப்பி இருக்கும் நிலையில் இதுகுறித்து ஒவியா காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நிலையில், ஓட்டலில் நடந்த சண்டை தான் ஓவியாவின் அந்தரங்க வீடியோ வெளியாக காரணம் என பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் இருக்கும் டாட்டூவை பார்த்து அது ஓவியா தான் என்று இணைய வாசிகள் கூறி வந்தனர். வீடியோவில் இருப்பது நான் இல்லை, மார்பிங் வீடியோ என்று ஓவியா மறுப்பு தெரிவிக்காமல், இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு தில்லாக பதில் அளித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் எந்த பெண்ணாக இருந்தாலும் உடைத்து போவார்கள்.ஆனால், இதற்கு தைரியமாக பதிலளித்து வரும் ஓவியாவை இணையவாசிகள் கொண்டாடி வருகின்றனர்.

புகார்: இதையடுத்து, நடிகை ஓவியா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வீடியோ மார்பிங் செய்யப்பட்டதாகவும், ஓவியாவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டு இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக நடிகை ஓவியாவின் மேலாளர் புகார் தெரிவித்துள்ளார். தவறான வீடியோவை பரப்பியவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஓட்டலில் சண்டை: இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் Metro mail என்ற யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதில் இருக்கும் டாட்டூவைப் பார்த்து அது ஓவியா தான் என் கன்ஃபார்ம் செய்து விட்டார்கள். அந்த வீடியோவில் ஓவியாவுடன் இருப்பது தாரிக், இருவரும் லிவ்விங்டூ ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்கள். தாரிக்கை திருமணம் செய்து கொள்ளும்படி ஓவியா கேட்டுள்ளார். இதனால் ஹைதராபாத் ஓட்டலில் சண்டை நடந்துள்ளது. இதையடுத்துத்தான் ஓவியாவின் அந்தரங்க வீடியோவை தாரிக் வெளியிட்டு உள்ளார். இதுமட்டும் இல்லாமல் இந்த வீடியோ வெளிநாட்டில் பணத்திற்கு விற்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்தும் ஒவியா தாரிக் மீது புகார் கொடுத்து உள்ளார்.
பலருடன் ரிலேஷன்ஷிப்: ஓவியா இந்த வீடியோவை மறுக்கவே இல்லை, வேண்டுமானால் செக்ஸ் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். இருப்பினும் அந்தரங்க வீடியோவை வெளியிட்டது தப்புத்தான் அதற்காக தாரிக் நிச்சயம் தண்டிக்கப்படுவார். ஓவியாவும் சாதாரணமான ஆள் இல்லை தண்ணி அடித்துக்கொண்டு பாட்டிலும் கையுமா இருக்கும் வீடியோவை பலமுறை வெளியிட்டு இருக்கிறார். அதையும் அவர் மறுத்தது இல்லை படவாய்ப்பு இல்லாததால் மனஅழுத்தத்தில் தண்ணி அடிச்சேன் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல, பலருடன் ரிலேஷனஷிப்பிலும் இருந்தும் இருக்கிறேன். இனிமேல் எதுவுமே வேண்டாம் என்று இருக்கும் போது, இப்படி ஒரு பிரச்சனையை கிளப்பி விட்டார்கள் என்று ஓவியா சொல்லி புலம்பி இருக்கிறார்.
ஓவியாவிற்கு படவாய்ப்பு போனதற்கு காரணமே அவரின் குடிபழக்கம் தான், ஒரு சில படத்தில் நடித்து வந்தார். ஆனால், அங்கேயும் தண்ணி அடித்துவிட்டு படுத்துக்கொண்டதால், அவரை யாரும் படத்திற்கு அழைக்கவில்லை என்றுப பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











