Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய்சேதுபதிக்கும் அந்த நடிகைக்கும் தொடர்பு இருந்தது உண்மைதான்.. பிரபல நடிகரின் பேச்சால் பரபரப்பு!
சென்னை: விஜய் சேதுபதிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக நடிகரும் யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோ கதாப்பாத்திரம் மட்டுமின்றி வில்லன் கதாப்பாத்திரத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
அண்மையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க சம்மதித்ததால் கடும் விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் ஆளானார்.
தனி ரசிகர் பட்டாளம்
விஜய் சேதுபதி தமிழில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இருவரின் காம்போவுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கடைசியாக இருவரும் இணைந்து நடித்த, க/பெ ரணசிங்கம் பெரும் வரவேற்பை பெற்றது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்த படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கான படம். படம் முழுக்க அவரே வியாப்பித்திருந்தார் என்ற பேச்சு எழுந்தது. மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இருவருக்கும் தொடர்பு
ஹீரோயின் மட்டுமின்றி அம்மா, தங்கை என குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் தன்னுடன் அதிகப் படங்களில் சேர்ந்து நடித்த விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தொடர்பு உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல் வெளியானது.
தொடர்பு உண்மைதான்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள நடிகரும் சினிமா செய்தியாளருமான பயில்வான் ரங்கநாதன், விஜய் சேதுபதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் தொடர்பு இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களின் தொடர்பால் விஜய் சேதுபதி வீட்டில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
பச்சையாக கருத்து
அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பயில்வான் ரங்கநாதன், ஏற்கனவே சினிமா இன்டஸ்ட்ரியில் உள்ள பல நட்சத்திரங்கள் குறித்து கிசுகிசுக்களை கூறி வருகிறார். வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பாடி டிமாண்ட் என பச்சையாக கருத்து கூறியிருந்தார்.
கருத்தால் பரபரப்பு
தொடர்ந்து விஷால் திருமணம் நின்றதற்கான காரணம், சங்கீதாவின் கட்டுப்பாட்டில் விஜய் இருக்கிறார் என பல பரபரப்பு தகவல்களை கூறி பரபரப்பை கிளப்பியிருக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து அவர் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.