மாட்டிறைச்சி: நடுமண்டையில நங்குன்னு கொட்டுறது மாதிரி ட்வீட்டிய அரவிந்த் சாமி

By Siva

சென்னை: மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக நடிகர் சித்தார்த்தை அடுத்து நடிகர் அரவிந்த் சாமியும் துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார்.

மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகத்திலும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

அரவிந்த் சாமி

ஊட்டச்சத்து குறைபாடால் அவதிப்படும் குழந்தைகள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக பசி குறியீட்டில் இந்தியா 67வது இடத்தில் இருக்கிறது என்று நடிகர் அரவிந்த் சாமி ட்வீட்டியுள்ளார்.

உணவு

உணவை பறிக்க காரணம் தேடிக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு உணவு அளிக்க வழிவகைகளை தேடுவதற்கும் அதே வேகத்தை காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அதை தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன என்கிறார் அரவிந்த் சாமி.

சார்

அரவிந்த் சாமியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் கமெண்ட் போட்டிருப்பதாவது, உடம்ப இரும்பாக்கிக்கோங்க சார். பக்தாஸ் ஆக்ரோஷமா தாக்குவாங்க இப்போ.

இந்தியனே

கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் வந்து நீங்க இந்தியனே இல்லனு சொல்லிட்டு போவும் என மற்றொரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.

பார்சல்

அண்ணனுக்கு ஒரு தேச விரோத பட்டம் பார்சல்..... 😂😂😂😂

இப்போ வரும் ஒரு குரூப்.... பட்டம் தர... என அரவிந்த் சாமியின் ட்வீட்டுக்கு ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X