Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பீப் பாடல்: நடிகர் சிம்பு முன் ஜாமீன் மனு தாக்கல்... விசாரணை நாளை தொடக்கம்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். மனு மீதான விசாரணை நாளை தொடங்குகிறது.
பீப் பாடல் விவகாரத்தில் அனிருத்திற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நானே முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன் என்று நடிகர் சிம்பு சமீபத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த விவகாரத்தில் இயக்குனரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தனது பங்கிற்கு தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். தற்போது இந்த விவகாரத்தில் கோவை போலீசார் மீண்டும் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பி வருகின்ற 2 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சிம்பு, அனிருத் இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் புதியதாக போடப்பட்டு உள்ளன.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கில் கோவை போலீசார் 2 வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்புவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை துவங்குகிறது.
பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அமையுமா? என்பது நாளை தெரிய வரும்.