செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து..!
சென்னை: பீப் பாடலுக்கும் எனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை அப்படின்னு அனிருத் சொன்னாலும் சொன்னார். இந்த நெட்டிசன்களின்
அட்டகாசம் தாங்க முடியல பாஸ்.
அனிருத் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மீம் போட்டு கலாய்க்க ஆரம்பிசிட்டாங்க. நான் பெண்களை தாயாக மதிப்பவன் தொடங்கி அவர்
சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு மீம் உருவாக்கியிருக்காங்க.
இதைப் பார்க்கும்போது நான் ஏன் இந்த விளக்கத்தை கொடுத்தேன்னு அனிருத்தே நொந்து போய்டுவாரு போல.
இவங்க எப்பவுமே இப்படித்தான் பாஸ்
பாஸ் பாஸ் பிரச்சனைனு வந்ததும் விட்டு ஓடுறீங்க பாத்தீங்கலா இவிங்க இப்பிடி தான் வாங்க.
இதுக்கும் எனக்கும்
பீப் பாடலிற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லைங்கோ, இந்த சிம்பு பயல நான் முன்ன, பின்ன கூட பார்த்தது இல்லைங்கோ.
செஞ்சோற்றுக் கடன்
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா அனிருத் வஞ்சகன் சிம்புவடா
பீப் பாடலா
நான் பீப் பாடல் எழுதவும் இல்லை, பாடவும் இல்லை அவ்வளவு ஏன் மியூசிக் கூட என்னது இல்லை.அவ்வளவு ஏன் நான் பெண்களை மிகவும் மதிப்பவன்.
மியூசிக்
என்னதான் இருந்தாலும் நான் தான் மியூசிக் போட்டேன்னு நம்பறீங்க பாருங்க அதுதான் உண்மையான சந்தோஷம்.
அனிருத்த காணோம்
எங்க அனிருத்தை காணோம் என்று ஷாக்காகி சிம்பு அவரைத் தேடுகிறார்.
இப்படிப் பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி நெட்டில் உலவ விட்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











