Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
உங்க வீட்டு பிரச்சனைக்கு நாங்க தான் கிடைத்தோமா?: நடிகரை எச்சரித்த போலீஸ்
Recommended Video
பெங்களூரு: தெற்கு பெங்களூரு போலீசார் நடிகர் துனியா விஜய்யை அழைத்து எச்சரித்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய்க்கு நாகரத்னா, கீர்த்தி கவுடா என்று இரண்டு மனைவிகள். முதல் மனைவி 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
துனியா விஜய் தனது 2வது மனைவியுடன் வசித்து வருகிறார்.
தமிழ் ராக்கர்ஸ் விஷயத்தில் காலாவதியான விஷாலின் சவால்: என்ன செய்யப் போகிறார்?
சண்டை
துனியா விஜய் வீட்டில் குடும்ப பிரச்சனையாக உள்ளது. முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும் இடையே அடிபுடி சண்டை நடந்து அது காவல் நிலையம் வரை சென்றது. அவர்கள் அடிக்கடி சண்டை போடுவதால் அப்பகுதி மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர்.
புகார்
துனியா விஜய்யின் மனைவிகள் ஒருவர் மீது மற்றொருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். மேலும் விஜய்யின் மகள் மோனிகா தனது தந்தை, சித்தி ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். விஜய் தன்னுடைய 2வது மனைவியுடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக மோனிகா புகார் தெரிவித்தார்.
விஜய்
குடும்ப பிரச்சனை காரணமாக துனியா விஜய் வீட்டில் இருந்து ஒவ்வொருத்தராக சென்று போலீசில் புகார் அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தெற்கு பெங்களூரு பகுதியின் டிசிபி அண்ணாமலை விஜய், கீர்த்தி மற்றும் அவரின் பெற்றோரை நேரில் அழைத்து எச்சரித்துள்ளார். வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று விஜய்யை அவர் எச்சரித்துள்ளார். மேலும் ரூ. 5 லட்சத்திற்கு சூரிட்டி பாண்டும் அளிக்குமாறு அவரிடம் கேட்கப்பட்டது.
குடும்பத்தார்
குடும்ப பிரச்சனையால் தொடர்ந்து புகார் தெரிவித்து வரும் விஜய் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது கிரிநகர் போலீசார் கடந்த 27ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். நகரில் அமைதியை காக்கும் வகையில் டிசிபி அண்ணாமலை பிறப்பித்த உத்தரவின்பேரில் விஜய் மற்றும் அவர் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.