Don't Miss!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls
Recommended Video
சென்னை : தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்கள் யார் என தேர்ந்தெடுப்பதற்காக நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம்.
வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்தக் கருத்துக்கணிப்பில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.
பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் 2017-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராக நா.முத்துக்குமார் தேர்வு செய்யப்படுகிறார்.
சிறந்த பாடலாசிரியர் 2017
ஆனந்த யாழை மீட்டிய முத்துக்குமார் கடந்த ஆண்டு இயற்றியது பேரன்பின் ஆதி ஊற்று. ராமின் தரமணி ஆல்பத்தில் தனித்துத் தெரிந்தார் முத்துக்குமார். 'யாரோ உச்சிக்கிளை மேலே..' என அதிரடித்து 'உன் பதில் வேண்டி' என உருகியது முதல் 'பாவங்களை சேர்த்துக்கொண்டு' என கலங்கவைத்தது வரை நா.முத்துக்குமார் ஆடியது ருத்ர தாண்டவம். ரசிகர்களின் ப்ளேலிஸ்ட்டை தனது பாடல்களின் மூலம் நிறைத்த கவிஞன் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி.
நா.முத்துக்குமார்
56.54% பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்று 2017-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராக தேர்வாகி இருக்கிறார் நா.முத்துக்குமார். 2016-ல் அமரராகிப் போன முத்துக்குமாரின் வரிகள் தமிழ் வாழும் வரை நிலைத்து நிற்கும். அவரது பாடல்கள் இசை வாழும் வரை உயிர்த்திருக்கும். ரசிகர்களின் தேர்வும் அதையே மெய்ப்பிக்கிறது.
மதன் கார்க்கி
உலக அரங்கில் பல வெற்றிச் சரித்திரம் படைத்த 'பாகுபலி'க்கு பாட்டெழுதி பெருமை சேர்த்தது கார்க்கியின் கீபோர்டு. இந்திய அளவில் மிக அதிகமாக ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டிருக்கும் பாடல்களுக்குச் சொந்தமான மதன் கார்க்கியின் வரிகளில் கடந்த ஆண்டு நிறைய பாடல்கள் வெளிவந்தன. அவற்றில் பெரும்பாலானவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதற்காக, ரசிகர்கள் கொடுத்த வாக்குகள் 18.87%.
வைரமுத்து
14.46% வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்திருப்பது கவிப்பேரரசு வைரமுத்து. 'வான் வருவான்' என இளைஞர்களின் கீதமாக ஒலித்த பாடலை 'காற்று வெளியிடை' படத்துக்காக எழுதினார். 'சாரட்டு வண்டியில' என கும்மிப் பாட்டை ஆண்ட்ராய்டு போன்களில் ரிங்டோனாக மாற்றிய பெருமையும் வைரமுத்துவையே சேரும். இன்னும் இன்னும் இவரிடம் வைர வரிகளைக் கேட்கிறது தமிழ்ச் சமூகம்.
விவேக்
2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட இரண்டு டஜன் படங்களுக்கு பாடல் இயற்றிய விவேக்குக்கு கடந்த ஆண்டு கிடைத்த ஒற்றைப் புளியங்கொம்பு 'மெர்சல்'. விஜய் என்ட்ரிக்கு ஒரு பாடல், கெத்துக்கு ஒரு பாடல் என கலந்துகட்டி அடித்த விவேக் தளபதி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். மெலடி, பீட் என பிரித்து மேய்ந்த விவேக்குக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு மொத்த வாக்குகளில் 5.71%.
விவேகா
பாடலாசிரியர் விவேகாவின் வரிகளில் உருவாகி 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் இடம்பெற்ற 'எம்புட்டு இருக்குது ஆச' பாடல் ரொமான்டிக் மெலடியாக ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. எந்த வகையான பாடல் என்றாலும், முத்திரை பதிக்கும் விவேகாவுக்கு வாசகர்கள் அளித்த வாக்குகள் 4.42%. இன்னும் பல பாடல்கள் இயற்றி ரசிகர்களின் அபிமானம் பெற வாழ்த்துவோம்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்