Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பகவத் கீதையை பற்றி தவறாக பேசினேனா?: விஜய் சேதுபதி விளக்கம்
Recommended Video
சென்னை: பகவத் கீதை குறித்து தான் எந்த ஒரு விமர்சனமும் செய்யவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
சில தொலைக்காட்சி சேனல்களின் லோகோ போன்றே போலியாக வைத்து ட்வீட் செய்பவர்கள் அதிகம். அதில் யாரோ ஒரு செய்தி சேனலின் லோகோவை பயன்படுத்தி விஜய் சேதுபதிக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிட்டனர்.
'பகவத் கீதை' ஒன்றும் புனித நூல் கிடையாது. இன்றைய சீரழிவுக்கு இது போன்ற கற்பனையால் உருவாக்கப்பட்ட நூல்களே காரணம் என்று விஜய் சேதுபதி கூறியதாக ஒரு செய்தி சேனல் செய்தி வெளியிட்டது போன்று ட்விட் செய்தனர். ஆனால் அதை பார்த்தவர்கள் ஒரு செய்தி சேனலே வெளியிட்டதால் உண்மை என்று நம்பி விஜய் சேதுபதியை விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.
இதை பார்த்த விஜய் சேதுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,
என் அன்பிற்குரிய மக்களுக்கு
பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை
பேசவும் மாட்டேன்
சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது
எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
என் அன்பிற்குரிய மக்களுக்கு
— VijaySethupathi (@VijaySethuOffl) February 11, 2019
பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை
பேசவும் மாட்டேன்
சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது
எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் pic.twitter.com/40nkrbVfR5
சிலர் விஜய் சேதுபதியை விமர்சித்தபோதிலும் அவர் அப்படி பேசுபவர் இல்லை என்பது பலருக்கும் தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நான் அதை First Time பார்க்கும் போது Shocking ah இருந்துச்சு..
— Kapilan Sachchithananthan (@iamkapilan) February 12, 2019
But, எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு #VijaySethupathi ண்ணா மதங்கள் சம்பந்தமா Negative கருத்து சொல்லி இருக்க மாட்டார்னு.. Because He is மக்களின் செல்வன் for that reason. @VijaySethuOffl