Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காவிரிப் பிரச்சினை: நமக்கே இப்படியிருக்கு.. ரஜினிக்கு எப்படி இருக்கும்?.. பாக்யராஜ்!#cauvery
சென்னை: காவிரி பிரச்சினையால் கர்நாடகாவில் இருந்து வந்து தமிழகத்தில் சூப்பர்ஸ்டாராக இருக்கும் ரஜினிக்கு தர்மசங்கடமான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.
கிஷோர், லதா ராவ் நடிப்பில் வைகறை பாலன் இயக்கியிருக்கும் புதிய படம் 'கடிகார மனிதர்கள்'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் காவிரி பிரச்சினை குறித்தும் மேடையில் பேசினர்.
முதலில் தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் பேசுகையில், "கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை பேடர கண்ணப்பா என்ற படத்தில் அறிமுகப்படுத்தியவர் தமிழர் ஏவி.எம். அப்படி இருக்கும்போது ராஜ்குமாரின் மகன்கள் தமிழர்களுக்கு எதிராக செயல்படலாமா? தண்ணீர் தர மாட்டோம் என்று சொல்லலாமா?" என கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ், "காவிரி பிரச்சினை குறித்து பேசினாலும் பிரச்சினை, பேசாவிட்டாலும் பிரச்சினை என்ற நிலை உள்ளது. கர்நாடக கலைஞர்கள் என்னவெல்லாம் பேசுறாங்க. செய்றாங்க.. உங்களுக்கு மானம், ரோஷம் இருக்கா.. சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுறீங்களா..?'என்று நம்ம ஆட்களிடம் கேட்கும்போது நாம் என்ன செய்ய முடியும்?
நமக்கே இப்படியிருக்கும் போது கர்நாடகாவில் இருந்து வந்து தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டாரா இருக்கும் ரஜினிக்கு எப்படி இருக்கும். அவருக்கு இது எவ்வளவு பெரிய தர்மசங்கடமான பிரச்சினை. அதனால் இந்த காவிரி நீர் பிரச்சினையை அமைதியாக பேசித் தீர்த்துக் கொள்வதுதான் சரியான வழி" என்றார்.