Don't Miss!
- News மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடக்குமா? என்பதே கேள்விக்குறி.. பாஜகவை விளாசிய ப சிதம்பரம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
பாடலே இல்லாத டார்க் த்ரில்லர் படம்...பரத்துக்கு ஜோடியாகும் வாணி போஜன்
சென்னை : கோலிவுட்டில் இது த்ரில்லர் பட சீசன். அதனால் தொடர்ந்து அதிக அளவில் த்ரில்லர் படங்களே இயக்கப்பட்டு வருகின்றன. ஆக்ஷன் படங்களின் எண்ணிக்கை கூட குறைந்து வருகிறது. அந்த வரிசையில் மற்றொரு த்ரில்லர் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதன் இயக்குனர் சக்திவேல்.
சுந்தர்.சி.,க்கு கொரோனா...மருத்துவமனையில் அனுமதி...தகவலை பகிர்ந்த குஷ்பு
புதுமுக இயக்குனரான எம்.சக்திவேல் இயக்கும் டார்க் த்ரில்லர் படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளார். இந்த படம் பற்றி சக்திவேல் கூறுகையில், இது வித்தியாசமான படமாக இருக்கும். நீங்கள் த்ரில்லர் என்று சொன்னால் அது ஒரு குறிப்பிட்ட ரக ரசிகர்களை குறிக்கும். ஆனால் இது குடும்பங்களையும் ஈர்க்கும் படம். த்ரில்லர் படமாக இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
இன்ஜினியராக நடிக்கும் பரத்
இந்த படத்தில் இன்ஜினியராக பரத்தும், அவரது மனைவியாக வாணியும் நடிக்கிறார்கள். நான் இந்த கதையை எழுதும் போதே இவர்கள் இந்த ரோலுக்கு பொருத்தமாக இருப்பார்கள் என தோன்றியது. நடிப்பிற்கு ஏற்றவர்களாகவும், ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என நினைத்தேன்.
இவர்கள் சரியான தேர்வு
இருவருமே தங்கள் வேலைகளில் திறமையானவர்கள். அதனால் என் கதைக்கு இவர்கள் பொருத்தமாக இருப்பார்கள். டில்லி பாபுவிடம் நான் இந்த கதையை கூறிய போது அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவரும் இந்த படத்திற்கு அவர்கள் சரியான தேர்வு என கூறினார். இருவருக்கும் சம அளவு முக்கியத்துவம் இந்த படத்தில் இருக்கும். இவர்களின் மற்றொரு முகத்தை ரசிகர்கள் இந்த படத்தில் பார்ப்பார்கள்.
குடும்ப கதை
ஒட்டுமொத்த கதைகளமும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஒரு எளிமையான குடும்பத்தை சுற்றி தான் கதை அமைக்கப்பட்டுள்ளது என்றார் சக்திவேல். இந்த படம் தென்காசி, அம்பாசமுத்திரம், சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் குறிப்பிட்ட அளவிலான கேரக்டர்கள் தான்.
பாடல்களே கிடையாது
இந்த படத்தில் பாடல்களே கிடையாது என்ற கூடுதல் தகவலையும் பகிர்ந்துள்ளார் சக்திவேல். கே.எஸ்.ரவிக்குமார், துளசி, ராஜ்குமார் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியிடப்படும் எனவும் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!