Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சல்மான் படம்.. பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புற்றி வைத்த பரத்.. அப்ப வில்லன் யார் தெரியுமா?
சல்மான் கானின் ராதே படத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என்றும், போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சல்மான் கானின் ராதே படத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என நடிகர் பரத் தெரிவித்துள்ளார்.
தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் பரத். ஜாக்பாட் அடித்தது போல் இந்தியில் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தில் நடிக்கும் வாய்ப்பு பரத்துக்கு கிடைத்தது.
ராதே படத்தில் சல்மானுக்கு வில்லனாக பரத் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என்பது தெரியவந்துள்ளது.
பிரபு தேவா கொடுத்த வாய்ப்பு
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பரத் அளித்துள்ள பேட்டியில், "பிரபு தேவா மாஸ்டரை எனக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். நல்ல திறமைகளை மதிக்கக்கூடியவர் அவர். ஜெயம் ரவியின் பிறந்தநாள் விழாவில் இருந்த போது, பிரபு தேவா மாஸ்டர் போன் செய்து, ராதே படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என கூறினார்.
வில்லன் இல்லை
இந்த படத்தில் நான் வில்லனாக நடிக்கவில்லை. ரன்தீப் ஹூடா தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராதே படத்தில் நான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். சல்மான் கானுடன் எப்போதும் உடனிருக்கும் கேரக்டர் அது. இந்த படத்துக்காக இன்னும் அதிகமாக ஜிம் ஒர்க்கவுட் செய்து, உடம்பை ஏற்றியுள்ளேன்.
நல்ல வாய்ப்பு
தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருப்பதால், இந்தியில் துணை கதாபாத்திரத்தில் நடிப்பது ஓகே தானா என பிரபு தேவா கேட்டார். ஆனால் இந்த நல்ல வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதறக்காக உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டேன். இந்த படத்தில் எனது லுக் ஸ்டைலாகவும், கடினமானதாகவும், முரட்டுத்தனமாகவும் இருக்கும்.
சல்மானின் ரசிகன்
சல்மான் கானை எனக்கு சிசிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது இருந்தே தெரியும். அந்த நேரத்தில் எல்லோரும் ஜாலியாக கலாட்டா செய்து கொண்டிருப்போம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் சல்மான் அப்படியே வேறு. ஒரு ரசிகனாக அவரது நடிப்பை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறேன்", என பரத் தெரிவித்துள்ளார்.
பரத்தின் காளிதாஸ்
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள காளிதாஸ் படம் விரைவில் வெளியாக உள்ளது. சைகோ திரில்லர் படமான இதிலும், பரத் காவல்துறை அதிகாரி வேடத்தில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.