Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பாரதிராஜா ஒரு குரங்கு, அவர் நடிகரே இல்லை: பார்த்திபன்
சென்னை: பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குரங்கு பொம்மை. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பாரதிராஜா பற்றி பேசியதாவது,
பாரதிராஜா
பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு.
குரங்கு
குரங்கு என்றால் ஒரு வார்த்தை ஆனால் நான்கு எழுத்து உள்ளது. சிறந்த 'கு'ணவான், சிறந்த 'ர'சனையாளர், இ'ங்'கிதம் அறிந்தவர், 'கு'வாலிட்டியான ஒரு மனிதர்.
நடிகர்
எனக்கு தெரிந்து பாரதிராஜா ஒரு நல்ல மனிதரே தவிற நல்ல நடிகரே இல்லை. பாராதிராஜா நடிக்கும் என்று போட்டால் அவர் நடிச்சிட மாட்டார். நான் இந்த படத்தில் நான்கு, ஐந்து காட்சிகள் பார்த்தேன். நடிக்கவே இல்லை அவ்வளவு சிறப்பாக அப்படியே வாழ்ந்திருக்கிறார்.
நடிப்பு
அவருடைய மிக சிறப்பான ஒரு விஷயம் அவர் நடிப்பு சொல்லிக் கொடுப்பாரே தவிர அவர் நடிக்கவே மாட்டார். நான் சொல்வது சினிமாவில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும், மேடையிலும் எங்கேயுமே நடிக்கத் தெரியாத அப்ராணி மனிதர் அவர். அதனால் தான் நிறைய இடத்தில் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்.
பாராட்டு
பாரதிராஜாவை நாம் பாராட்டுவது ரொம்ப, ரொம்ப முக்கியான விஷயம். இந்த படம் எல்லாம் 20, 30 வருஷத்திற்கு பிறகு பெரிய பதிவாகிவிடும். நாம் எப்பொழுதுமே இருக்கும்போது யாரையும் பெரிதாக பாராட்டுவது இல்லை, வாழ்த்துவது இல்லை.
நடக்கும்
தமிழ் திரையுலகின் சார்பாக பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நாம் எடுத்தே தீர வேண்டும். அந்த ராமாயணத்தில் நானும் ஒரு அணிலாக இருக்க ஆசைப்படுகிறேன். அது விரைவில் நடக்கும் என்றார் பார்த்திபன்.