Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாரதிராஜா ஒரு குரங்கு, அவர் நடிகரே இல்லை: பார்த்திபன்
சென்னை: பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குரங்கு பொம்மை. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பாரதிராஜா பற்றி பேசியதாவது,
பாரதிராஜா
பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு.
குரங்கு
குரங்கு என்றால் ஒரு வார்த்தை ஆனால் நான்கு எழுத்து உள்ளது. சிறந்த 'கு'ணவான், சிறந்த 'ர'சனையாளர், இ'ங்'கிதம் அறிந்தவர், 'கு'வாலிட்டியான ஒரு மனிதர்.
நடிகர்
எனக்கு தெரிந்து பாரதிராஜா ஒரு நல்ல மனிதரே தவிற நல்ல நடிகரே இல்லை. பாராதிராஜா நடிக்கும் என்று போட்டால் அவர் நடிச்சிட மாட்டார். நான் இந்த படத்தில் நான்கு, ஐந்து காட்சிகள் பார்த்தேன். நடிக்கவே இல்லை அவ்வளவு சிறப்பாக அப்படியே வாழ்ந்திருக்கிறார்.
நடிப்பு
அவருடைய மிக சிறப்பான ஒரு விஷயம் அவர் நடிப்பு சொல்லிக் கொடுப்பாரே தவிர அவர் நடிக்கவே மாட்டார். நான் சொல்வது சினிமாவில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும், மேடையிலும் எங்கேயுமே நடிக்கத் தெரியாத அப்ராணி மனிதர் அவர். அதனால் தான் நிறைய இடத்தில் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்.
பாராட்டு
பாரதிராஜாவை நாம் பாராட்டுவது ரொம்ப, ரொம்ப முக்கியான விஷயம். இந்த படம் எல்லாம் 20, 30 வருஷத்திற்கு பிறகு பெரிய பதிவாகிவிடும். நாம் எப்பொழுதுமே இருக்கும்போது யாரையும் பெரிதாக பாராட்டுவது இல்லை, வாழ்த்துவது இல்லை.
நடக்கும்
தமிழ் திரையுலகின் சார்பாக பாரதிராஜாவுக்கு மிகப்பெரிய பாராட்டு விழா நாம் எடுத்தே தீர வேண்டும். அந்த ராமாயணத்தில் நானும் ஒரு அணிலாக இருக்க ஆசைப்படுகிறேன். அது விரைவில் நடக்கும் என்றார் பார்த்திபன்.
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
Pandian stores 2: தூக்குச்சட்டிக்குள் பிணைந்த கைகள்.. ரொமான்ஸ் மோடில் சரவணன் -தங்கமயில்!