Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சூரி நாயகனாக நடிக்கும் படம்.. வெற்றிமாறன் படத்தில் பாரதிராஜா திடீர் விலகல்.. இணைந்தார் பிரபல நடிகர்!
சென்னை: தனது உடல்நிலையை காரணம் காட்டி வெற்றிமாறன் படத்தில் இருந்து இயக்குனர் பாரதி ராஜா விலகியுள்ளார்.
Recommended Video
தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த 'அசுரன்' ஹிட்டுக்குப் பிறகு, அடுத்தப் படத்தை தொடங்க இருந்தார் வெற்றிமாறன்.
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கொண்டாடும் ரசிகர்கள்... கோல்டன் குளோப் விழாவில் தனுஷின் அசுரன், சூர்யாவின் சூரரைப் போற்று!
குளறுபடிகள் நடந்தன
கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் பல குளறுபடிகள் நடந்தன. இதனால், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விட்டுவிட்டு, சூரி நடிக்கும் படத்தை இயக்க வெற்றி மாறன் முடிவு செய்தார். நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை கதையாக்கி சூரி நடிப்பில் படமாக்க இருந்தார்.
கதையை மாற்றினார்
அது அரபு நாடொன்றில் வேலை பார்க்கும் ஒருவரின் கதை. துபாய்க்கு ஷூட்டிங் செல்ல இருந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், வெளிநாடு சென்று படமாக்கும் வாய்ப்பில்லை என்ற சூழல் ஏற்பட்டது. இதனால் சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றினார்.
ஜெயமோகனின் துணைவன்
சிறுகதை மற்றும் நாவல்களை படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர். லாக்கப் நாவலை, விசாரணை என்ற பெயரில் படமாக்கிய அவர், வெக்கை நாவலை 'அசுரன்' ஆக்கினார். வாடிவாசல் நாவலை அதே பெயரில் படமாக்க இருக்கிறார். இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை படமாக்குகிறார்.
பாரதிராஜா விலகல்
இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தொடங்கியது. ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து பாரதிராஜா விலகியுள்ளார்.
இணைந்தார் கிஷோர்
அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், தனது உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளாது என்று பாரதிராஜா விலகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கேரக்டரில் இப்போது கிஷோர் நடித்து வருகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பவானிஶ்ரீ நாயகியாக நடிக்கிறார்.