Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சூரி நாயகனாக நடிக்கும் படம்.. வெற்றிமாறன் படத்தில் பாரதிராஜா திடீர் விலகல்.. இணைந்தார் பிரபல நடிகர்!
சென்னை: தனது உடல்நிலையை காரணம் காட்டி வெற்றிமாறன் படத்தில் இருந்து இயக்குனர் பாரதி ராஜா விலகியுள்ளார்.
Recommended Video
தனுஷ், மஞ்சு வாரியர் நடித்த 'அசுரன்' ஹிட்டுக்குப் பிறகு, அடுத்தப் படத்தை தொடங்க இருந்தார் வெற்றிமாறன்.
சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை அவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
கொண்டாடும் ரசிகர்கள்... கோல்டன் குளோப் விழாவில் தனுஷின் அசுரன், சூர்யாவின் சூரரைப் போற்று!
குளறுபடிகள் நடந்தன
கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் பல குளறுபடிகள் நடந்தன. இதனால், சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விட்டுவிட்டு, சூரி நடிக்கும் படத்தை இயக்க வெற்றி மாறன் முடிவு செய்தார். நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை கதையாக்கி சூரி நடிப்பில் படமாக்க இருந்தார்.
கதையை மாற்றினார்
அது அரபு நாடொன்றில் வேலை பார்க்கும் ஒருவரின் கதை. துபாய்க்கு ஷூட்டிங் செல்ல இருந்த நிலையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், வெளிநாடு சென்று படமாக்கும் வாய்ப்பில்லை என்ற சூழல் ஏற்பட்டது. இதனால் சூரி நடிக்கும் படத்தின் கதையை மாற்றினார்.
ஜெயமோகனின் துணைவன்
சிறுகதை மற்றும் நாவல்களை படமாக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர். லாக்கப் நாவலை, விசாரணை என்ற பெயரில் படமாக்கிய அவர், வெக்கை நாவலை 'அசுரன்' ஆக்கினார். வாடிவாசல் நாவலை அதே பெயரில் படமாக்க இருக்கிறார். இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை படமாக்குகிறார்.
பாரதிராஜா விலகல்
இதில், நடிகர் சூரி போலீஸ்காரராகவும், பாரதிராஜா புரட்சியாளராகவும் நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் ஷூட்டிங் டிசம்பர் மாதம் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தொடங்கியது. ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடிக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து பாரதிராஜா விலகியுள்ளார்.
இணைந்தார் கிஷோர்
அந்தப் பகுதியில் கடும் குளிர் நிலவுவதால், தனது உடல்நிலைக்கு ஒத்துக் கொள்ளாது என்று பாரதிராஜா விலகியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கேரக்டரில் இப்போது கிஷோர் நடித்து வருகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். பவானிஶ்ரீ நாயகியாக நடிக்கிறார்.