Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காமத்தைப் போதிக்கவா வந்தோம்? 'இரண்டாம் குத்து' விளம்பரம் கண்டு கூசினேன்.. பாரதிராஜா ஆவேசம்!
சென்னை: இரண்டாம் குத்து பட விளம்பரம் கண்டு கூசினேன் என்றும் காமத்தை போதிக்கவா சினிமாவுக்கு வந்தோம் என்றும் இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக கூறியுள்ளார்.
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.
இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி உள்ளது. இதை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார்.
பச்சை பச்சையா டயலாக்.. அப்பட்டமான காட்சிகள்.. ஆபாசம் நிறைந்த இரண்டாம் குத்து டீசரில் இருப்பது இதான்!
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த போஸ்டரில் நடுவில் நாயகி உள்ளாடைகளுடன் நிற்க, ஒரு பக்கம் டேனியலும் மறுபக்கம் சந்தோஷும் அந்த இடத்தில் ஆள் உயர வாழைப்பழத்தை வைத்தப்படி போஸ் கொடுத்திருந்தனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இரட்டை அர்த்த வசனம்
இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி உள்ளது. இதில் அதிகமான இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் காட்சிகளுடன் டீசர் நீள்கிறது. இது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதற்கு இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக கண்டம் தெரிவித்துள்ளார்.
தமிழர் பண்பாடு
அவட் வெளியிட்டிருக்கும் ஆவேச அறிக்கை: சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. சினிமாவினால் மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப்பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர்களை உருவாக்குவது சாத்தியப்பட்டிருக்கிறது. உலகெங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரணமல்ல.
பேணிக்காத்த சினிமா
பல கலைஞர்கள் கட்டியமைத்த கூடு. தார்மீகப் பொறுப்புகளோடு சமூக பாதிப்புகள் நேராது கண்ணியத்தோடு பேணிக்காத்த சினிமாவை இன்று வியாபாரம் என்ற போர்வையில் கண்ணியமற்று சீரழிக்கிறோமோ என்ற கவலை மேலிட ஒரு வலியோடு பார்க்கிறேன். சினிமா வியாபாரமும்தான்.
கேவலமான பதிவோடு
ஆனால் வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்?
சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை.
படுக்கையை எடுத்து
இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது?
நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.
கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன்.
பார்க்கவே கூசினேன்
ஆனால் "இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?
பெண்மக்கள் இல்லையா?
இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது. நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலை கொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன்.
திரையுலகிற்கு ஆகாது
இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள். எத்தனை கற்பழிப்புகள்? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்துகொள்ளுங்கள்.