Just In
- 2 hrs ago
நம்புங்க நானும் நல்லவன்தான்.. ஏவியை பார்த்து ஃபீல் பண்ணிய பாலா.. கடைசியா பேசியது இதுதான்!
- 7 hrs ago
காயப்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்.. ஃபினாலே மேடையில் விழுந்து உருக்கமாக மன்னிப்பு கேட்ட ஆரி
- 7 hrs ago
கடைசியா நேர்மை வென்று விட்டது.. பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி.. ரன்னர்-அப் பாலாஜி முருகதாஸ்!
- 8 hrs ago
கதர் ஆடையை கையில் எடுத்த கமல்.. புதிய ஃபேஷன் பிராண்ட் ‘KH’ .. போட்டியாளர்களுக்கு கதர் துணி பரிசு!
Don't Miss!
- News
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.. சென்னைக்குள் என்ட்ரியாக முடியாமல் பரிதவிக்க வைத்த டிராபிக் ஜாம்!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 18.01.2021: இன்னைக்கு இந்த ராசிக்காரங்க வாயை திறக்காம இருக்குறது நல்லது…
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன இப்படி சொல்லிட்டாப்ல.. நஷ்டம் வரும்.. 'ஆத்தா'வை கைவிட்டார் இயக்குனர் பாரதிராஜா!
சென்னை: ஆத்தா என்ற படத்தை இயக்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
அடுத்து விஜய் நடிக்கும் படம்தான்.. சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ஷூட்டிங் ஓவர்.. படக்குழு ஹேப்பி!
இயக்குனர் பாரதிராஜா, கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற படத்தை இயக்கி இருந்தார்.

ராசி நட்சத்திரா
இதில், அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மவுனிகா, ஜோ மல்லூரி, ராசி நட்சத்திரா உட்பட பலர் நடித்திருந்தனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. ஆனால், கவனிக்கப்படவில்லை.

கொரோனா பரவல்
இதற்கிடையே அவர் ஆத்தா என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இதன் ஷூட்டிங்கை கொரோனா பரவல் தீவிரம் குறைந்த பிறகு தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கதையான இதை பாரதிராஜா இயக்க இருந்தார்.

இளையராஜா இசை
இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. கடைசியாக இருவரும் நாடோடி தென்றல் படத்தின் இணைந்திருந்தனர். இதனால், 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்பட்டது. அதோடு வைரமுத்துவும் இந்த கூட்டணியில் இணைவதாகத் தகவல்கள் வெளியாயின.

படமாக்கி இருந்தால்
இந்நிலையில், அந்தப் படத்தைக் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார் பாரதிராஜா. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால், உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம்.

கைவிடப்படும் ஆத்தா
கால சூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்தக் கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது,
ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால், ஆத்தா கைவிடப்படுகிறது.

புதிய கூட்டணி
புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏன் இந்த முடிவு என்று அவர்கள் சோசியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர்.