Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
என்ன இப்படி சொல்லிட்டாப்ல.. நஷ்டம் வரும்.. 'ஆத்தா'வை கைவிட்டார் இயக்குனர் பாரதிராஜா!
சென்னை: ஆத்தா என்ற படத்தை இயக்கும் முடிவை கைவிட்டுவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
அடுத்து விஜய் நடிக்கும் படம்தான்.. சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' ஷூட்டிங் ஓவர்.. படக்குழு ஹேப்பி!
இயக்குனர் பாரதிராஜா, கடைசியாக 'மீண்டும் ஒரு மரியாதை' என்ற படத்தை இயக்கி இருந்தார்.
ராசி நட்சத்திரா
இதில், அவர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மவுனிகா, ஜோ மல்லூரி, ராசி நட்சத்திரா உட்பட பலர் நடித்திருந்தனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு ரகுநந்தன் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. ஆனால், கவனிக்கப்படவில்லை.
கொரோனா பரவல்
இதற்கிடையே அவர் ஆத்தா என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இதன் ஷூட்டிங்கை கொரோனா பரவல் தீவிரம் குறைந்த பிறகு தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமாரின் கதையான இதை பாரதிராஜா இயக்க இருந்தார்.
இளையராஜா இசை
இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. கடைசியாக இருவரும் நாடோடி தென்றல் படத்தின் இணைந்திருந்தனர். இதனால், 28 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய இருப்பதாகக் கூறப்பட்டது. அதோடு வைரமுத்துவும் இந்த கூட்டணியில் இணைவதாகத் தகவல்கள் வெளியாயின.
படமாக்கி இருந்தால்
இந்நிலையில், அந்தப் படத்தைக் கைவிடப்படுவதாக அறிவித்துள்ளார் பாரதிராஜா. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால், உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம்.
கைவிடப்படும் ஆத்தா
கால சூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்தக் கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது,
ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால், ஆத்தா கைவிடப்படுகிறது.
புதிய கூட்டணி
புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏன் இந்த முடிவு என்று அவர்கள் சோசியல் மீடியாவில் கேட்டு வருகின்றனர்.
-
அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!