Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எத்தனை வாரிசு நடிகர்களைத் தான் களம் இறக்கப் போகிறார் பாரதிராஜா?
சென்னை: குற்றப்பரம்பரை ஒருவழியாக இப்போதைக்கு இல்லை என்று ஆகிவிட்டது. எனவே உடனடியாக ஒரு சின்ன படத்தை எடுத்து தன்னை நிரூபிக்கத் தயாராகி வருகிறார் பாரதிராஜா.
அலைகள் ஓய்வதில்லை பார்ட் 2வாக இருக்கும் என்று சொல்லப்படும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்கள் எல்லாமே புதுமுகங்கள் தானாம். யார் யார் என்பது தான் இதுவரை தகவல் இல்லை.
ஒருபக்கம் இயக்குனர் வசந்தின் மகனை அறிமுகப்படுத்தப் போகிறார் பாரதிராஜா என்கிறார்கள். வசந்தின் மகன் தான் மூன்றுபேர் மூன்று காதல் படத்தில் விடு விடு தலைவா பாடலுக்கு நடனமாடியவர்.
லிவிங்ஸ்டன் மகளை ஹீரோயினாக்கப் போவதாகவும் தகவல் வந்தது. லிவிங்ஸ்டன் மகள் ஒரு நிகழ்ச்சியில் கண்ணில் பட அவரை நடிக்க வைக்கிறேன் என்று லிவிங்ஸ்டனிடம் சம்மதம் கேட்டதாக ஒரு செய்தி வந்தது.
கார்த்திக்கின் இளைய மகன் வெகு நாட்களாக பாரதிராஜா கைகளால் தான் அறிமுகமாக வேண்டும் நடிப்புப் பயிற்சிகள் எடுத்து வருகிறார். விக்ரமின் மகனையும் அறிமுகப்படுத்தவிருப்பதாக அறிவிப்பு வந்தது.
ஆக, பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை பார்ட் 2வுக்காக தான் அரை டஜன் வாரிசுகள் கோடம்பாக்கத்தில் காத்திருக்கின்றனர். பாரதிராஜா மனதில் என்ன இருக்கிறதோ?