twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பாரதிராஜாவை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்கவில்லை... நாமாவது கவுரவிப்போம்!'

    By Shankar
    |

    சென்னை: தமிழ் சினிமாவின் ஞானக்கிறுக்கனான பாரதிராஜாவுக்கு சினிமா நூற்றாண்டு விழாவில்தான் மரியாதை தரவில்லை... நாமாவது கவுரவிப்போம், என்று நடிகர், இயக்குநர் பார்த்திபன் கூறினார்.

    இளையதேவன் இயக்கிய 'ஞான கிறுக்கன்' படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் பாரதிராஜாவும், பார்த்திபனும் பங்கேற்றனர்.

    Parthiban and Bharathiraja

    விழாவில் பார்த்திபன் பேசும்போது, "பாரதிராஜாவுக்கு சினிமா தவிர ஒன்றும் தெரியாது. தமிழ் சினிமாவின் 'ஞான கிறுக்கன்' அவர்.

    சினிமா மேல் பித்து பிடித்த மகா கலைஞன். என்னைப் போன்ற நூறு இயக்குனர்களையும் பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார். இயக்குனர்களின் இமயம் அந்த மனிதர்.

    அப்படிப்பட்ட பாரதிராஜாவை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்காமல் விட்டுவிட்டனர். நாம் இந்த மேடையில் அவரை கவுரவிப்போம்," என்றார்.

    பின்னர் மேடையிலேயே பாரதிராஜாவுக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    English summary
    Director Parthiban hailed Bharathiraja as true legend in Tamil cinema and honoured him on Gnanakirukkan audio launch stage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X