Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'பாரதிராஜாவை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்கவில்லை... நாமாவது கவுரவிப்போம்!'
சென்னை: தமிழ் சினிமாவின் ஞானக்கிறுக்கனான பாரதிராஜாவுக்கு சினிமா நூற்றாண்டு விழாவில்தான் மரியாதை தரவில்லை... நாமாவது கவுரவிப்போம், என்று நடிகர், இயக்குநர் பார்த்திபன் கூறினார்.
இளையதேவன் இயக்கிய 'ஞான கிறுக்கன்' படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனியில் நடந்தது. இதில் பாரதிராஜாவும், பார்த்திபனும் பங்கேற்றனர்.
விழாவில் பார்த்திபன் பேசும்போது, "பாரதிராஜாவுக்கு சினிமா தவிர ஒன்றும் தெரியாது. தமிழ் சினிமாவின் 'ஞான கிறுக்கன்' அவர்.
சினிமா மேல் பித்து பிடித்த மகா கலைஞன். என்னைப் போன்ற நூறு இயக்குனர்களையும் பதினைந்தாயிரம் உதவி இயக்குனர்களையும் அவர்தான் உருவாக்கினார். இயக்குனர்களின் இமயம் அந்த மனிதர்.
அப்படிப்பட்ட பாரதிராஜாவை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவிக்காமல் விட்டுவிட்டனர். நாம் இந்த மேடையில் அவரை கவுரவிப்போம்," என்றார்.
பின்னர் மேடையிலேயே பாரதிராஜாவுக்கு ஆளுயர மாலை அணிவித்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது.