Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுத பாரதிராஜா
Recommended Video
சென்னை: மகேந்திரனின் உடலை பார்த்ததும் இயக்குநர் பாரதிராஜா கதறி அழுதுள்ளார்.
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைக்கப்பட்டது.
திரையுலக பிரபலங்கள் மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முதல் ஆளாக நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மகேந்திரன் இயக்கிய கை கொடுக்கும் கை படத்தில் பார்வை இல்லாத பெண்ணாக நடித்திருந்தார் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் மணிரத்னம் தனது மனைவி சுஹாசினியுடன் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
எனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்க முடியாத ஓர் உறவுண்டு: வைரமுத்து
நடிகைகள் ராதிகா சரத்குமார், அர்ச்சனா, வரலட்சுமி, நடிகர்கள் மோகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். இசைஞானி இளையாராஜா மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இயக்குநர் இமயம் பாரதிராஜா தூங்குவது போன்று சாந்தமாக இருந்த மகேந்திரனின் உடலை பார்த்ததும் கதறி அழுதுவிட்டார்.