Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக பாரதிராஜா
34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. இந்தப் படத்தை என்வி நிர்மல்குமார் இயக்குகிறார்.
ஓம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரதிராஜா தனது மனோஜ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக பாரதிராஜாவுடன் இணைகிறார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கங்கை அமரன் பாடல்கள் எழுதுகிறார்.
ஒரு வயதான தந்தைக்கும் அவர் மகனுக்குமான பாசப் போராட்டத்தைச் சொல்லும் படம் இது என்கிறார்கள். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அமெரிக்காவில் நடக்கவிருக்கிறது.
பாரதிராஜா இயக்குநராவதற்கு முன், ஹீரோவாகத்தான் முயற்சி செய்தார். அப்போது அந்த ஆசை நிறைவேறவில்லை. புகழ்பெற்ற இயக்குநரான பின்னர் 1980-ல் கல்லுக்குள் ஈரம் படத்தில் நாயகனாக நடித்தார். அந்தப் படத்தை பாரதிராஜா மேற்பார்வையில் நிவாஸ் இயக்கினார். படமும் பாடல்களும் சிறப்பாக அமைந்தும் படம் சுமாராகத்தான் போனது. அதற்குப் பிறகு ஹீரோவாக அவர் நடிக்கவில்லை.
தாவணிக் கனவுகள், ஆயுத எழுத்து, ரெட்டைச் சுழி, பாண்டிய நாடு படங்களில் அழுத்தமான பாத்திரங்களில் நடித்தார். தாவணிக் கனவுகள் மற்றும் பாண்டிய நாடு படங்களில் அவர் பாத்திரம் சிறப்பாக அமைந்தது.
34 ஆண்டுகளுக்குப் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் பாரதிராஜா.