Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழகத்தின் பொக்கிஷம் கமல், அவரை சீண்டாதீர்கள்.. பாரதிராஜா எச்சரிக்கை
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விஷப் பரீட்சை உண்டு. கமல் இப்போது அந்த பரீட்சையில் இறங்குகிறார்.
விஸ்வரூபம் படம் டி.டி.எச்.யில் வரக்கூடாது என்கின்றனர். இந்த படத்தை கமல் செலவு செய்து எடுத்துள்ளார். அதை எப்படி வியாபாரம் செய்ய வேண்டும் என்பது அவருக்கு உள்ள உரிமை. அதில் யாரும் தலையிடக்கூடாது.
சிவாஜி, கமல், இளையராஜா போன்றோர் தமிழகத்தின் பொக்கிஷங்கள். கமலை கோவணம் கட்டி நடிக்க வைத்தேன். அப்போது பெரிய நடிகராக இருந்தார். ஆனாலும் கேரக்டருக்காக சொன்ன உடனேயே கோவனத்துக்கு மாறினார். அவருக்கு வேறு தொழில் தெரியாது. சினிமாவிலேயே வாழ்கிறார்.
கமல் நடிப்பதோடு மட்டுமல்ல சினிமாவில் சிறந்த டெக்னீஷியனாகவும் மாறி உள்ளார். விஸ்வரூபம் படத்தை எனக்கு திரையிட்டு காட்டினார். பிரமிப்பாக இருந்தது. புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி இருந்தார். ஒரு தமிழன் உலக அளவிலான தொழில் நுட்ப விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது பெருமையாக இருந்தது. அவரை சீண்டி பார்க்காதீர்கள். வாழ விடுங்கள் என்றார் பாரதிராஜா.
இதேபோல தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறுகையில், கமல் ரிஸ்க் எடுப்பார். அதில் ஜெயிக்கவும் செய்வார். டிடிஎச்சில் விஸ்வரூபம் வருவதை எல்லோரும் விரும்புகிறார்கள். திரையுலகம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறது என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.