Don't Miss!
- News "க்ளீன் ஸ்வீப் வெற்றி.." ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் பிளான்.. ,ஸ்டன் ஆன ஆந்திர எதிர்க்கட்சிகள்
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
உனக்கும், உன் இசைக்கும், என்றும் வயதில்லை வாழ்த்துக்கள்டா.. இளையராஜாவை வாழ்த்திய பாரதிராஜா!
சென்னை: இசைஞானி இளையராஜா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
Recommended Video
இளையராஜாவின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
யூ டியூபில் 100 மில்லியன் இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன்.. சிம்பு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
இசை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இசை உலக கடவுளை சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.
தேதி மாற்றம்
1943ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பண்ணைப்புரத்தில் பிறந்தவர் இசைஞானி இளையராஜா. மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக அவரது பிறந்தநாளில் தானும் பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என ஒரு நாள் முன்னதாக ஜூன் 2ம் தேதி தனது பிறந்தநாளை பல ஆண்டுகளாக கொண்டாடி வருகிறார்.
இசைஞானி
தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்த இசை பொக்கிஷமாக இளையராஜா திகழ்ந்து வருகிறார். உலகம் முழுவதிலும் இந்த இசை ஞானியின் இசைக்கு அடிமையாகி கிடப்பவர்கள் பல கோடி பேர் உள்ளனர். இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட திரை பிரபலங்களும் இசை ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துக்கள்டா
உனக்கும்,
உன் இசைக்கும்,
நம் உறவுக்கும்,
என்றும் வயதில்லை
வாழ்த்துக்கள்டா. #Ilaiyaraaja
உயிர்த் தோழன்
பாரதிராஜா." என நெகிழ்ச்சியான கவிதையை எழுதி தனது ஆருயிர் நண்பர் இளையராஜாவை வாழ்த்தி உள்ளார்.
இருவரும் இணைந்து
16 வயதினிலே படத்தின் மூலம் தொடங்கிய நட்பு இத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. விரைவிலேயே மீண்டும் இணைந்து இருவரும் படம் பண்ண உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்புகள் வெளியாகின. கொரோனா பரவல் காரணமாக அந்த படைப்பு இன்னும் ஆரம்பிக்காமலே உள்ளது குறிப்பிடத்தக்கது.