கடனை அடைக்க முடியாத வருத்தம்.. பாரதிராஜா பற்றி உறவினர் ஓபன் டாக்.. ரொம்ப ஃபீல் செஞ்சாராம்

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா சில வாரங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. தங்கள் வீட்டில் ஏற்பட்ட இழப்பு போல் அனைவருமே கண்ணீர் விட்டார்கள். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க; அவரது இறுதி காலம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வருகின்றன. அதுகுறித்து பாரதிராஜாவின் உறவினரும், இயக்குநருமான மனோஜ்குமார் பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல வீரிய விதைக்களை விதைத்தவர் பாரதிராஜா. பல நடிகர்கள் நடிகைகள், பாடலாசிரியர் வைரமுத்து என பலரை அவர்தான் அறிமுகம் செய்தார். தன்னுடைய படம் என்ன கேட்கிறதோ, யாரை கேட்கிறதோ அதுதான் அவரது இறுதி முடிவாக இருக்கும். அதன் காரணமாகத்தான் அவரது படங்கள் எல்லாம் இத்தனை வருடங்கள் கழித்தும் உயிர்ப்போடு இருக்கின்றன. அவரும் பலரிடம் சென்று சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bharathiraja s Final Days - Director Manoj Kumar Breaks Silence On Debt And Family Rumours
Photo Credit:

பரிதவித்த பாரதிராஜா: இயக்குநர், நடிகர் என பல முகங்களை கொண்ட அவர்; தனது மகன் மனோஜ் உயிரிழப்பிலிருந்து கடைசிவரை மீளவே இல்லை. தன்னுடைய மகன் சினிமாவில் வெல்லவில்லையே என்ற வருத்தத்தை விடவும்; அவர் இப்போது தன்னுடன் இல்லையே என்ற சோகம்தான் அவரை உருக்குலைத்தது. அவரை எப்படியாவது பழைய நிலைக்கு மீட்டுவிட வேண்டும் என்ற கங்கை அமரன் உள்ளிட்டோர் எல்லாம் முயன்றார்கள்தான். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

Also Read
நீங்கள் எல்லாம் காலி.. எதிர்க்கட்சிகளை பார்த்து ஆக்‌ஷன் செய்த சி.எம் விஜய்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்
நீங்கள் எல்லாம் காலி.. எதிர்க்கட்சிகளை பார்த்து ஆக்‌ஷன் செய்த சி.எம் விஜய்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்

மரணமடைந்த பாரதிராஜா: தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும்; உடல்நலம் ஒத்துழைக்காததால் சிகிச்சை பலனின்றி சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வத்தலகுண்டு அருகே இருக்கும் காட் ரோடு பகுதியில் அமைந்திருக்கும் பண்ணை வீட்டில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாநிலம் எங்கிலுமிருந்து ஏராளமானோர் அந்த இறுதி மரியாதையில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

விரும்பத்தகாத தகவல்கள்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பாரதிராஜாவின் இறுதி காலம் பற்றி சில விரும்பத்தகாத தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அதாவது அவர் குடும்பத்தை பிரிந்து தனிமையில் இருந்தார், ஏகப்பட்ட கடன் இருந்தது, மகளுக்கும், மருமகளுக்கும் சொத்து சண்டை என்றெல்லாம் சொல்லப்பட்டன. கங்கை அமரன் பாரதிராஜாவின் மனைவியிடம், 'எல்லோரும் விட்டுட்டு போய்ட்டீங்க.. அவர் தனியாக போய்விட்டார்' என கத்தியது, இறுதி சடங்குகள் போது மனோஜ் மனைவியிடம் பாரதிராஜாவின் மகள் ஜனனி வாக்குவாதம் செய்ததெல்லாம் அந்தத் தகவல்களுக்கு சலங்கை கட்டிவிட்டபடி ஆகிவிட்டன.

மனோஜ்குமார் விளக்கம்: இந்நிலையில் பாரதிராஜாவின் உறவினரும், இயக்குநரும், நடிகருமான மனோஜ்குமார் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "எல்லோரும் விட்டுட்டு போய்ட்டீங்களே என கங்கை அமரன் கூறினார். பிறகு அவரிடம் எடுத்து சொன்னோம்.ஒரு வாரத்துக்கு முன்னர் கங்கை அமரன் வந்தாரே. ராதிகா வந்தாங்க. உனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று சொன்னாரே. அப்போது எல்லோருமே இருந்தார்களே. அவருக்கு ஒரு வருத்தம். தன்னுடைய கடன்களை அடைப்பதற்கு தன்னை மீறி யாரும் ஒத்துழைக்கவில்லையோ என ஃபீல் செய்தார். ஏனெனில் அவர் ராஜா மாதிரி வாழ்ந்தவர்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X