Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
லாக்டவுன்ல இது அதிகரிக்குதே.. பேஸ்புக்கில் தனது பெயரில் போலி கணக்கு.. எச்சரித்த பிரபல ஹீரோயின்!
சென்னை: பேஸ்புக்கில் தனது பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழில், சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர், மலையாள நடிகை பாவனா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.
கன்னடத்தில் இவர் நடித்த படத்தை தயாரித்த நவீனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்தது. 2018 ஆம் ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
தளபதி விஜய் தான் புரொஃபஸர்.. மணி ஹெய்ஸ்ட் இயக்குநரே சொல்லிட்டாரே.. தல அஜித்துக்கு இந்த ரோலாம்!
சிவராஜ்குமார்
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த பாவனா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் வெளியான '96' படத்தின், கன்னட ரீமேக்கில் நடித்தார். இதில் விஜய் சேதுபதி கேரக்டரில் கணேஷ் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை அங்கு பெறவில்லை. இதையடுத்து சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் பஜராங்கி 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
லாக்டவுன்
மேலும், இன்ஸ்பெக்டர் விக்ரம் 2020, கோவிந்தா கோவிந்தா ஆகிய கன்னட படங்களிலும் மலையாளத்திலும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா, அடிக்கடி ஏதாவது தகவல்களையும் தனது புகைப்படங்களை பதிவு செய்துவருகிறார்.
பேஸ்புக் பக்கம்
இந்நிலையில் தனது பெயரில் போலி பேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளர். பேஸ்புக்கில் நான் இணையவில்லை, என் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. ரசிகர்கள் அதை பின் தொடர வேண்டாம் என்று எச்சரித்துள்ள அவர், இந்த போலி பக்கம் தொடர்பாக புகார் அளிக்கும்படியும் தனது ரசிகர்களிடம் கூறியுள்ளார்.
புகார் அளிக்கவும்
அந்த லிங்கை இணைத்துள்ள அவர், 'நான் பேஸ்புக்கில் இல்லை. இது எனது பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி பேஸ்புக் பக்கம். இதுபற்றி புகார் அளிக்கவும்' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் சிலர் புகார் அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் பெயரில் போலி பேஸ்புக் கணக்குகள் பல தொடங்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வருகிறது
இதுபற்றி ஏற்கனவே பல நடிகைகள் புகார் அளித்திருந்தனர். இந்த லாக்டவுன் நேரத்தில் நடிகைகளின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகைகள் ஷோபனா, அனுபமா பரமேஸ்வரன், ஊர்மிளா ரவ்தெலா, ஸ்வாதி உட்பட சில நடிகைகளின் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில் நடிகை பாவனாவும் தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு இருப்பதைப் பற்றி எச்சரித்துள்ளார்.