Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்? நடிகை பாவனா விளக்கம்
நடிகை பாவனாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி திருச்சூரில் நேற்று நடைபெற்றது.
கன்னட தயாரிப்பாளர் நவீனைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார் பாவனா. நவம்பர் 2014-ல் இருவரும் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கவேண்டியிருந்ததால் தற்போதுதான் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 16 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியரும் பங்கேற்றார்.
நிச்சதார்த்தத்தை யாருக்கும் சொல்லாமல் நடத்தியது குறித்து பாவனா கூறுகையில், "என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தக்கூடாது என்பதற்காக ரகசியமாக நடத்தினேன். அதனால் இந்நிகழ்ச்சி என் வீட்டில் நடைபெற்றது. என் நெருங்கிய நண்பர்களைக்கூட நான் அழைக்கவில்லை. தகவலை மட்டுமே சொன்னேன். என் திருமணம் நடக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். நவீனைக் கடந்த 5 வருடங்களாகத் தெரியும். என் முதல் கன்னடப் படமான ரோமியோவின் தயாரிப்பாளர் அவர். எங்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும்," என்றார்.