Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
திடீர் ரகசிய நிச்சயதார்த்தம் ஏன்?: நடிகை பாவனா பேட்டி
திருவனந்தபுரம்: தயாரிப்பாளர் நவீனுடன் திடீர் என ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது ஏன் என்பது குறித்து நடிகை பாவனா விளக்கம் அளித்துள்ளார்.
மலையாள நடிகை பாவனாவும், கன்னட பட தயாரிப்பாளரான நவீனும் காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் கேரளாவில் உள்ள பாவனாவின் வீட்டில் வைத்து ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
இது குறித்து பாவனா மலையாள செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
நவீன்
நவீன் மற்றும் அவரது குடும்பத்தார் பெண் பார்க்கும் சம்பிரதாயத்திற்காக எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். இருவீட்டாரும் இருந்த சமயத்தில் மோதிரம் மாற்றிக் கொள்ளலாமே என்ற பேச்சு கிளம்பியது.
நிச்சயதார்த்தம்
மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியதால் தான் நிச்சயதார்த்தம் திடீர் என்று நடந்துவிட்டது. திடீர் என நடந்ததால் நெருங்கிய நண்பர்களுக்கு கூட தெரிவிக்க முடியவில்லை.
திருமணம்
எனக்கு திருமணம் நடக்கும் வரை நிச்சயதார்த்தம் நடந்தது யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் நிச்சயதார்த்த புகைப்படம் கசிந்து அனைவருக்கும் தெரிந்துவிட்டது என்று பாவனா தெரிவித்துள்ளார்.
மஞ்சு
நிச்சயதார்த்தத்திற்கு பாவனாவின் நெருங்கிய தோழிகளான நடிகைகள் மஞ்சு வாரியர், சம்யுக்தா வர்மா ஆகியோர் வந்திருந்தனர். அவர்கள் அடிக்கடி பாவனா வீட்டிற்கு செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.