இளையராஜா பேன்ஸ் கிளப்: கார்த்திக் ராஜாவுக்கு பதில் பவதாரிணி தலைவர்
சென்னை: இளையராஜா பேன்ஸ் கிளப் தலைவராக கார்த்திக் ராஜாவுக்கு பதில், பவதாரிணி செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் இளையராஜா பேன்ஸ் கிளப் (ஐஎப்சி) துவக்க விழா நடைபெறுகிறது .

இந்த அமைப்புக்கு இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா தலைவராகவும், தயாரிப்பாளர் வேலுச்சாமி, இயக்குநர் ரத்னகுமார் ஆகியோர் மேனேஜிங் ட்ரஸ்டிகளாகவும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இப்போது அதில் ஒரு மாற்றம். கார்த்திக் ராஜாவுக்கு உள்ள வேலை பளு காரணமாக அவருக்கு பதில் இளையராஜா மகள் பவதாரணி தலைவராக செயல்பட உள்ளார்.
இந்த பேன்ஸ் க்ளப் துவக்க விழாவில் யுவன்ஷங்கர் ராஜா,கார்த்திக்ராஜா, பவதாரணி மூவருமே பங்கேற்கின்றனர்.
இசைஞானி இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பாடுகிறார்.


Click it and Unblock the Notifications











