Don't Miss!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
அனேகன் படத்துக்காக வைரமுத்து பாடலை பாடினார் பவதாரிணி!
அனேகன் படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்து எழுதிய பாடலைப் பாடினார் இளையராஜா மகள் பவதாரிணி.
கல்பாத்தி அகோரம் அடுத்து தயாரிக்கும் படம் இந்த அனேகன். தனுஷ் நாயகனாக நடிக்க, கேவி ஆனந்த் இயக்குகிறார்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்களும் க்ளைமாக்ஸ் காட்சிகளும் மட்டும்தான் பாக்கியுள்ளனவாம்.
இந்த நிலையில் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட அல்லது விளம்பரத்தை அதிகரிக்க, இளையராஜா மகள் பவதாரிணியை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பதிவு செய்துள்ளனர்.
இதில் விசேஷம் பவதாரிணி பாடிய பாட்டு. அதை எழுதியவர் வைரமுத்து.
ஏற்கெனவே யுவன் சங்கருக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து. அது இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவுக்கு பிடிக்கவில்லை. இளையராஜா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை.
அடுத்து இப்போது இளையராஜாவின் ஆசி நிறைந்தவர் என்ற கூறப்படும் பவதாரிணியை வைத்து வைரமுத்து பாடலைப் பாட வைத்திருக்கிறார்கள்.
அன்னக்கொடி படம் தொடங்கியதிலிருந்தே இளையராஜாவுடன் இணைய பெரு விருப்பம் காட்டி வந்தார் வைரமுத்து. ஆனால் ராஜா தன் நிலையிலிருந்து இறங்கி வரவே இல்லை. இதனால், ராஜாவின் வாரிசுகளுடன் இணைந்து தன் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் வைரமுத்து.
வைரமுத்து பாடலை பவதாரிணி பாடுவது இதுவே முதல் முறை.