Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அனேகன் படத்துக்காக வைரமுத்து பாடலை பாடினார் பவதாரிணி!
அனேகன் படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்து எழுதிய பாடலைப் பாடினார் இளையராஜா மகள் பவதாரிணி.
கல்பாத்தி அகோரம் அடுத்து தயாரிக்கும் படம் இந்த அனேகன். தனுஷ் நாயகனாக நடிக்க, கேவி ஆனந்த் இயக்குகிறார்.
படத்தின் பெரும்பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்களும் க்ளைமாக்ஸ் காட்சிகளும் மட்டும்தான் பாக்கியுள்ளனவாம்.
இந்த நிலையில் படத்தின் சுவாரஸ்யத்தைக் கூட்ட அல்லது விளம்பரத்தை அதிகரிக்க, இளையராஜா மகள் பவதாரிணியை வைத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடல் பதிவு செய்துள்ளனர்.
இதில் விசேஷம் பவதாரிணி பாடிய பாட்டு. அதை எழுதியவர் வைரமுத்து.
ஏற்கெனவே யுவன் சங்கருக்கு பாடல் எழுதுகிறார் வைரமுத்து. அது இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவுக்கு பிடிக்கவில்லை. இளையராஜா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை.
அடுத்து இப்போது இளையராஜாவின் ஆசி நிறைந்தவர் என்ற கூறப்படும் பவதாரிணியை வைத்து வைரமுத்து பாடலைப் பாட வைத்திருக்கிறார்கள்.
அன்னக்கொடி படம் தொடங்கியதிலிருந்தே இளையராஜாவுடன் இணைய பெரு விருப்பம் காட்டி வந்தார் வைரமுத்து. ஆனால் ராஜா தன் நிலையிலிருந்து இறங்கி வரவே இல்லை. இதனால், ராஜாவின் வாரிசுகளுடன் இணைந்து தன் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறார் வைரமுத்து.
வைரமுத்து பாடலை பவதாரிணி பாடுவது இதுவே முதல் முறை.