Don't Miss!
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'சிக்ஸ்பேக் வச்சுகிட்டு அழறதெல்லாம் அபத்தம்..' பிக் பாஸை அப்படி கிண்டலடித்த பிரபல தொகுப்பாளினி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் அழுவது அபத்தமாக இருக்கிறது என்று நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறியுள்ளார்.
Recommended Video
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.
சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
அம்மியை இறக்கிய பிக்பாஸ்.. எங்க அந்த பக்கம் அர்ச்சனா மம்மியையே காணோம்.. ஷிவானி அரைச்ச அழகிருக்கே!
கிரிக்கெட் வர்ணனை
பரத நாட்டிய கலைஞரான இவர், நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருக்கிறார். இப்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடந்து வருகிறது. அதைப் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தொகுத்து வழங்கி வருகிறார், பாவனா.
சுசித்ரா என்ட்ரி
இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அடிக்கடி ஏதாவது கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பார். சில நாட்களுக்கு முன், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அதில், பிக் பாஸ் சுவாரஸ்யமாக மாற போகிறது என தெரிவித்திருந்தார். பாடகி சுசித்ராவின் என்ட்ரி பற்றி அப்படிச் சொன்னாரா என்று கேள்வி எழுந்தது.
கிண்டல், கண்ணீர்
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி, நடிகை ரேகா வெளியேறிய பின்பும் 16 பேருடன் நடந்து வருகிறது கலகலவென. அர்ச்சனா என்ட்ரியானதால், இன்னும் சுவாரஸ்யமாகி இருக்கிறது, இந்த வீடு. அடிக்கடி நடக்கும் மோதல், கிண்டல், கண்ணீர், சென்டிமென்ட் என செல்கிறது.
பாவனா கிண்டல்
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை இப்போது கிண்டலடித்து இருக்கிறார், பாவனா பாலகிருஷ்ணன். ஓவர் நாடகமாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள பதிவில், நான் 50 நாட்களுக்கு மேலாக ஐபிஎல்-லுக்காக குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறேன். ஆனால், நான் அழுவதில்லை, எமோஷன் ஆவதில்லை.
எவ்வளவு அபத்தம்?
அல்லது அனைவரையும் என் அம்மா, அக்கா என்று கூச்சலிடுவதில்லை. இங்கு உண்மையான, நெருங்கிய நண்பர்கள் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இந்த பிக்பாஸ் போட்டியாளர்கள் 3 வாரங்களில் இப்படியெல்லாம் சொல்வது எவ்வளவு அபத்தமானது? என்று கூறியுள்ளார்.
அதனால அழறாங்க
இதற்கு சில நெட்டிசன்ஸ் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 'நீங்க வீட்டுக்கு வெளியில கையில போன் வச்சிருக்கீங்க, பலரை மீட் பண்றீங்க. பிக் பாஸ் வீட்டுல போன் இல்ல, இன்டர்நெட் இல்ல, நிறைய பேரை சந்திக்கலை, அதனால அவங்க அழறாங்க என்று பலர் கூறியுள்ளனர்.
சிக்ஸ்பேக் அழுகை
சிலர், சிக்ஸ்பேக் உடம்பை வச்சுக்கிட்டு அழறதெல்லாம் ரொம்ப நாடகமா இருக்கு. என்னதான் ஸ்கிரிப்ட்டுன்னாலும் தாங்க முடியலை என சிலர் தெரிவித்துள்ளார். பாவனாவின் நெருங்கிய தோழி, சம்யுக்தா பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார். 'உங்க கருத்து சம்யுக்தாவுக்கும் பொருந்துமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.