Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பூமிகா பட இயக்குனருடன் கைகோர்க்கும் சித்தார்த்!
சென்னை : ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் சமீபத்தில் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியான பூமிகா திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் ரதிந்திரன் ஆர் பிரசாத்.
இவர் ஏற்கனவே மணி ரத்னம் தயாரிப்பில் உருவான நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் இன்மை என்ற பகுதியை இயக்கியிருந்தார்.
தமிழ் சினிமாவிற்கு புது வரவாக வந்திருக்கும் ரதிந்திரன் ஆர் பிரசாத் இயக்கியுள்ள பூமி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல பாராட்டுகளை பெற்று வரும் நிலையில் அடுத்த படத்தில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சொந்த மகன் மகளை நடிக்க வைத்து.. ஹாலிவுட் படம் எடுத்த சுஜா ரகுராம்.. ஜாலி பேட்டி!
இன்மை
இயக்குனர் மணிரத்னம் இப்போது பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பிரம்மாண்ட பொருட் செலவில் பிரம்மாண்ட நட்சத்திரங்களுடன் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் மெட்ராஸ் டாக்கீஸ் வாயிலாக பல தரமான படைப்புகளையும் தயாரித்து வரும் மணிரத்னம் சமீபத்தில் நவரசா என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டு இருந்தார். 9 இயக்குனர்கள் 9 வித்தியாசமான கதை களத்துடன் உருவான நவரசா திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
பயம் சுவையில்
இதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையை எடுத்துக்கூறும் வகையில் இருக்க இன்மை என்ற கதையை இயக்குனர் ரதிந்திரன் ஆர் பிரசாத் இயக்கியிருந்தார். பயம் சுவையில் உருவான இந்த பகுதியில் பார்வதி மற்றும் சித்தார்த் லீட் ரோலில் நடித்து இருந்தார்கள். புதுமையான அதேசமயம் வித்தியாசமான இந்த பகுதி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றிருந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது திரைப்படமாக உருவான பூமிகா படத்தையும் இயக்குனர் ரதிந்திரன் ஆர் பிரசாத் இயக்கி இருந்தார்.
நேரடியாக விஜய் தொலைக்காட்சியில்
இயல்பாகவே சுற்றுச்சூழல் மீது அதிகம் அக்கறை கொண்ட சுற்றுச்சூழல் ஆர்வலராக இருந்து வரும் ரதிந்திரன் ஆர் பிரசாத் பூமிகா திரைப்படத்தையும் சுற்றுச்சூழலை மையப்படுத்திய த்ரில்லர் பேய் படமாக உருவாக்கி இருந்தார். திரையரங்குகளில் வெளியாக இருந்த இந்த திரைப்படம் கொரோனா சூழல் காரணமாக நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியானது. ஐஸ்வர்யா ராஜேஷின் இயல்பான நடிப்பில் உருவான இந்த திரைப்படம் வித்தியாசமான ஹாரர் படமாக வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள ரதிந்திரன் அடுத்ததாக எந்த நடிகரை வைத்து இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது.
முன்னணி கதாநாயகனாக
நடிகர், பாடகர்,இயக்குனர் என பல முகங்களைக் கொண்ட நடிகர் சித்தார்த் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சில படங்களில் பணியாற்றி விட்டு ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து படத்திலும் நடித்திருந்தார். பின் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வாய்ப்புகள் அடுத்தடுத்து அமைய தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வெற்றிகளை கொடுத்து வந்த சித்தார்த் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சித்தார்த் இப்பொழுது தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி அமைத்த ஜிகர்தண்டா திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று சித்தார்த்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.
மஹா சமுத்திரம்
தொடர்ந்து காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்த சித்தார்த் எனக்குள் ஒருவன், காவியத்தலைவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக்,அவள்,சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் என்ன வித்தியாசமான கதைகளில் நடித்தும் வருகிறார். இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சேர உருவாகி வரும் மஹா சமுத்திரம் என்ற படத்திலும் நடித்து வருகிற. இவருடன் இணைந்து நடிகர் சர்வானந்த் மற்றொரு கதாநாயகனாக நடிக்க அதிதி ராவ் மற்றும் அனு இம்மானுவேல் என இரண்டு கதாநாயகிகள் இதில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படத்தை அஜய் பூபதி இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 10ம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.
இரண்டாவது முறையாக கூட்டணி
அதேபோல சைத்தான் கே பச்சா,மற்றும் டக்கர் உள்ளிட்ட படங்களும் சித்தார்த்துக்கு தமிழில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான நவரசா ஆந்தாலஜி திரைப்படத்தில் இயக்குனர் ரதிந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் உருவான இன்மை என்ற பகுதியில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சித்தார்த் மீண்டும் இயக்குனர் ரதிந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் இணைய உள்ளார். இன்மை மற்றும் பூமிகா ஆகிய படங்களை தொடர்ந்து ரதிந்திரன் ஆர் பிரசாத் அடுத்து இயக்கும் திரைப்படத்தை எடகி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்க இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் சித்தார்த் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. சித்தார்த் மற்றும் ரதிந்திரன் ஏற்கனவே இன்மை படத்தில் இணைந்த இந்த கூட்டணி இப்பொழுது இரண்டாவது முறையாக புதிய படத்தில் இணைய இருப்பதால் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் நடிகர் சித்தார்த்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட படங்களாகவே வெளியாகிறது அதேபோல இயக்குனர் ராஜேந்திரன் சுற்றுச்சூழல் மீது மிகவும் அக்கறை கொண்டவர் என்பதால் இவர்கள் இணையும் இந்தப் படமும் சமூகத்திற்கு தேவையான முக்கிய படமாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.