Don't Miss!
- News
தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன எடியூரப்பா! ஆனா அடுத்து சொன்ன வார்த்தை ரொம்ப முக்கியம்! பரபர பேச்சு
- Finance
ரெசிஷன் நினைக்கும் அளவுக்கு மோசமா இருக்காது.. ஐஎம்எப் கொடுத்த குட் நியூஸ்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
நன்றி கெட்டவர்கள்..உதவியது மறந்துவிட்டதா? 'இசை மாபியா' பற்றிப் பேசிய பாடகரை விளாசித் தள்ளிய நடிகை!
மும்பை: இசைத்துறையில் சிலர் நன்றி கெட்டவர்களாக இருக்கிறார்கள் என்று பிரபல நடிகை புகார் கூறியுள்ளார்.
இந்தி சினிமாவின் முன்னணி பின்னணி பாடகர் சோனு நிகம். இவர், தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.
இவர் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், பாலிவுட்டில் மியூசிக் மாபியா செயல்படுகிறது என்று கூறினார்.
மும்பை
வந்தது
சுஷாந்த்தின்
குடும்பம்..
வீட்டில்
சிக்கிய
மருந்து
மாத்திரைகள்..
தொடரும்
விசாரணை!

மோதி இருக்கிறீர்கள்
பிரபல இசை நிறுவனமான டி-சீரிஸ் நிறுவனத்தையும் அதன் உரிமையாளர் பூஷன் குமாரையும் கடுமையாகச் சாடியிருந்தார். பூஷன்குமார், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் கூட. பல படங்களைத் தயாரித்துள்ளார். சோனு வெளியிட்டுள்ள வீடியோவில், 'மரியாதையோடு அழைக்கும் தகுதியை இழந்துவிட்டீர்கள். தவறான நபரோடு மோதி இருக்கிறீர்கள். புரிந்துகொள்ளுங்கள்.

நினைவில் இருக்கிறதா?
எனக்காக ஆல்பம் பதிவு செய்யுங்கள் என்று என் வீட்டுக்கு வந்தது, ஸ்மிதா தாக்கரே, பால் தாக்கரேவை அறிமுகம் செய்து வைக்கும்படி கெஞ்சியது எல்லாம் நினைவில் இருக்கிறதா? என்னுடன் மோத வேண்டாம். எச்சரிக்கிறேன்' என்று கூறியிருந்தார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில பாடகர்கள், சோனு நிகம் வீடியோவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விலகிவிட்டேன்
பாடகி மோனாலி தாக்கூர் கூறும்போது, சோனு நிகம் சொன்னது உண்மைதான். இசைத்துறையில் மாபியா போல செயல்படுகிறார்கள். பலருக்கு அவர்களுக்கான பாக்கி இன்னும் கிடைக்கவில்லை. நான் மன அழுத்தம் காரணமாக என்னை இசை துறையில் இருந்து விலக்கிக்கொண்டேன். இனி பாடல் வாய்ப்பை பெற முயற்சிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

திவ்யா கோஷ்லா
இந்நிலையில், பூஷன்குமாரின் மனைவியும் நடிகையுமான திவ்யா கோஷ்லா, பாடகர் சோனு நிகமை நன்றி கெட்டவர் என்று கடுமையாக விளாசியுள்ளார். இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: மக்கள் தங்களது ஆணித்தரமான பிரச்சாரங்களால் பொய்களையும் வஞ்சங்களையும் விற்கக் கூடியவர்களாக இருப்பதைக் கூட இப்போது பார்க்க முடிகிறது.

விளையாட வேண்டும்
இது போன்றவர்களுக்கு மக்களின் மனதுடன் எப்படி விளையாட வேண்டும் என்பது தெரியும். கடவுள் நம் உலகை காக்கட்டும். சோனுஜி, இசைத்துறையில் உங்களுக்கு முதல் வெற்றியை கொடுத்ததும் இப்போது வரை உங்களுக்கு உதவிக் கொண்டிருப்பதும் டி-சீரிஸ் நிறுவனம்தான். பூஷனுடன் உங்களுக்கு பிரச்னை இருந்தால் அதை ஏன் முன்பே சொல்லவில்லை?

நன்றி கெட்டவர்கள்
இப்போது விளம்பரத்துக்காக ஏன் இப்படி செய்கிறீர்கள்? நானே, உங்கள் தந்தையின் பல இசை வீடியோக்களை இயக்கி இருக்கிறேன். அதற்கு அவர் எப்போதும் நன்றி உடையவராக இருக்கிறார். ஆனால், சிலர் நன்றிகெட்டவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார். இதற்கு சமுக வலைத்தளங்களில் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.