Don't Miss!
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒரு வழியாக பேத்தியின் பெயரை அறிவித்த அமிதாப் பச்சன்
ஐஸ்வர்யா ராய்க்கு கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பு எந்த தேதியில் பிறக்கும், ஆணா, பெண்ணா என்று ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன. ஏராளமானோர் பெட் கூட வைத்தனர். இன்று குழந்தை பிறக்கப் போகிறது, நாளை பிறக்கப் போகிறது என்று ஒரு வழியாக குழந்தையை பெற்றெடுத்தார் ஐஸ்வர்யா.
குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகியும் அதை உலகத்தார் பார்வையில் காட்டாமல் பத்திரமாக வைத்துள்ளனர். சரி அது அவர்கள் இஷ்டம். அபிஷேக் பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று மக்களிடம் டுவிட்டரில் கேட்டிருந்தார். நம்மாள்களும் ஏதோ இவர்கள் சொல்லும் பெயரைத் தான் அவர்கள் வைக்கப்போவது போன்று போட்டி போட்டுக் கொண்டு பெயர்களை பரிந்துரைத்தனர்.
ஆனால் அவர்கள் பெயரையும் கமுக்கமாக வைத்துவிட்டனர். ஊடகங்கள் எப்படியோ குழந்தையின் பெயர் ஆராத்யா என்று கண்டிபிடித்தன. ஆமாம் ஆராத்யா தான் குழந்தை பெயர் என்றும் பச்சன் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு அமர்க்களத்திற்கு பிறகு ரசிகை ஹசீனா வாசீர் என்பவர் கேட்டுக் கொண்டபிறகு அமிதாப் தனது பேத்தியின் பெயர் ஆராத்யா தான் என்று டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.