விளக்கி வைத்த குத்துவிளக்காக பளபளக்கும் ஐஸ்வர்யா தத்தா !
சென்னை : வளர்ந்து வரும் இளம் நடிகையாக ஐஸ்வர்யா தத்தா திகழ்ந்து வருகிறார்.
இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவர் சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றன.
தற்போது இவர் ஆரஞ்ச் நிற புடவையில் கலக்கலான போட்டோவை வெளியிட்டுள்ளார்.

பட வாய்ப்பு இல்லை
தமிழக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா, அந்தப்படங்களைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாம் சினம், சத்ரியன், மறைந்திருக்கும் பார்க்கும் மர்மம் என்ன போன்றபடத்தில் நடித்துள்ளார். எந்தப்படங்களும் பெயர் சொல்லும்படி இல்லை.

தமிழ் ரீமேக்கில்
ஆரியுடன் இணைந்து நடித்த அலேகா மற்றும் மகத்க்கு ஜோடியாக நடித்துள்ள கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் அதே சமயம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் மிளிர் திரைப்படத்திலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். மேலும் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்றதோடு தெலுங்கிலும் சக்கைப்போடு போட்ட லாஸ்ட் ஸ்டோரி தமிழில் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

2வது பரிசை வென்றார்
என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசையும் தட்டிச்சென்றார்.

மார்கெட்டை சரியாமல்
ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா,

மணப்பெண் கோலத்தில்
தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில், பளிச்சென்று விலக்கி வைத்த குடும்ப குத்துவிளக்காக பளபளனு மணப்பெண் கோலத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா. என்ன ஐஷூ கவர்ச்சி காட்டி காட்டி அலுத்துவிட்டதா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











