Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உக்கிரமாகும் கொரோனா.. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முன்னணி நடிகர்களின் படங்கள் நிறுத்தம்!
சென்னை: கொரோனா அச்சுறுத்தலால் பெரிய பட்ஜெட்டில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
என்னாது.. நானா.. இது மட்டும்தானா.. வேற ஏதும் இல்லையா.. ரம்யா பாண்டியன் தம்பி பரபர கேள்வி!
பல்வேறு மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருந்தபோதும் கொரோனா பரவலின் தீவிரம் குறைந்தபாடில்லை.
இனி வரும் நாட்களில்
சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனாவின் கோரத்தாண்டவம் வரும் நாட்களில் உச்சத்தில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பு நிறுத்தம்
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
சூர்யா படம் நிறுத்தம்
இதேபோல், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது மகனுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லாக்டவுன்
கடந்த ஆண்டு கொரோன காரணமாக 6 மாதங்களுக்கும் மேலாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இந்திய சினிமாத் துறை பேரிழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.