Don't Miss!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- News Silent Period பற்றி தெரியுமா? கண்காணிப்பில் சமூக ஊடகம்! கருத்து கந்தசாமிகளே உஷார்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கனவு நிறைவேறியது...நீண்ட காலம் காத்திருந்து சுசீலாவை சந்தித்த விக்ரம்
சென்னை : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் சியான் விக்ரம். இவருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் முதல் முறையாக இணைந்து மகான் படத்தில் நடித்துள்ளார்.
தலைசிறந்த படைப்பின் மிகச்சிறந்த ட்ரெயிலர்... விஜய் சேதுபதியை பாராட்டிய விக்னேஷ் சிவன்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய மகான் படம் விக்ரம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. விரைவில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார் விக்ரம். அதோடு மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் விக்ரம் முக்கிய ரோலில் நடித்த முடித்துள்ளார்.
காத்திருந்த விக்ரம்
லட்சக்கணக்கான ரசிகர்கள், விக்ரமை சந்திக்க வாய்ப்புக் கிடைக்காதா என காத்திருக்கின்றனர். ஆனால் விக்ரமிற்கோ, தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ஒருவரை சந்திக்க வேண்டும் என்பது விக்ரமின் நீண்ட நாள் கனவாம். அது வேறு யாருமில்லை. பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தான்.
விக்ரமின் கனவு
சுசீலாவை ஒருமுறையாவது சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காதா என விக்ரம் காத்திருந்தாராம். ஒரு வழியாக தற்போது விக்ரமின் கனவு, நினைவாகி உள்ளது. சமீபத்தில் சுசீலாவை சந்தித்த விக்ரம், அந்த ஃபோட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். சுசீலாவை சந்தித்த விபரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சுசீலாவின் தீவிர ரசிகர்
விக்ரம் தனது பதிவில், கடந்த அக்டோபர் மாதம் பி.சுசீலாவை சந்திக்க வாய்ப்பு கேட்டுள்ளார் விக்ரம். அன்று மாலையே சுசீலாவின் வீட்டிற்கு சென்றுள்ளார் விக்ரம் . சுசீலாவின் மிக தீவிர ரசிகர் என தன்னை குறிப்பிட்டுள்ள விக்ரம், அதை சுசீலாவிடமும் நேரடியாக சொல்லி உள்ளார் விக்ரம்.
அசந்து போன மேனேஜர்
விக்ரமின் இந்த பணிவு, பி.சுசீலாவிடம் அவர் காட்டும் பாசத்தை பார்த்து சுசீலாவின் மேனேஜர் அசந்து போய் விட்டாராம். விக்ரமை பார்ப்பதற்காக சுசீலா ஒதுக்கிய நேரத்தை விட 10 நிமிடங்களுக்கு முன்பே விக்ரம், அங்கு போய் விட்டாராம். மிகவும் பதற்றமாக இருந்தாராம்.
நிறைவேறிய கனவு
கிட்டதட்ட இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சுசீலாவுடன் பேசினாராம் விக்ரம். மற்ற வேலைகள் காரணமாக விக்ரமிற்கு ஃபோன் வந்ததால், வேறு வழியில்லாமலும், பிரிய மனம் இல்லாமலும் அங்கிருந்து கிளம்பி சென்றாராம் விக்ரம். இருந்தாலும் விக்ரம் மிகவும் சந்தோஷத்துடன் இருந்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் தான் மீண்டும் வருவதாக வாக்குறுதி அளித்து சென்றுள்ளார் விக்ரம்.