Don't Miss!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- News பில் கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துகளை பரிசளித்த மோடி.. கையில் உள்ள மற்றொரு கிப்ட் என்ன பாருங்க
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா- கலைப்புலி தாணு
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு விரைவில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு பேசுகையில், "
இவ்விழாவிற்கு விழாவிற்கு வருமாறு இளையராஜா அவர்களை அன்புடன் நான் அழைக்கும்போது, இளையராஜா அவருடைய தாய், தந்தை இடத்தில் பூஜை நடத்திக் கொண்டிருந்தார். நான் கூறியதும் உடனடியாக கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.
இப்ராகிம் ராவுத்தர் 95 சதவீத தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள் என்று கூறினார். தயாரிப்பாளர்களாக இருக்கும் 500 பேருக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அவர்களது இல்லம் தேடி செல்லும் அளவுக்கு எங்களுடைய உழைப்பு இருக்கும்.
இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் மெட்டமைத்திருக்கிறார். ஆனால், எந்த பாடலும் மற்றொரு பாடலை தொடாமல் இருக்கும். அவர் ஒரு அட்சயப் பாத்திரம், அமுத ஊற்று.
1000 படங்களைத் தொட்ட அவரது சாதனையைப் பாராட்டும் விதமாக அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் மிகப்பெரிய விழாவாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தியாவில் இதுபோன்ற ஒரு விழா நடத்தியிருக்க முடியாது என்கிற அளவுக்கு அது பிரம்மாண்டமாக இருக்கும்," என்றார்.