Don't Miss!
- News முஸ்லீம்.. ஹனுமான்.. லோக்சபா தேர்தலில் பிரச்சார ஸ்டைலை மாற்றிய மோடி.. பாஜக எடுத்த "அஸ்திரம்"
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பிரமாண்ட பாராட்டு விழா- கலைப்புலி தாணு
ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜாவுக்கு விரைவில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்தப்படும் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி சென்னையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் அம்மா அன்னம் அளிக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை இசைஞானி இளையராஜா தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு பேசுகையில், "
இவ்விழாவிற்கு விழாவிற்கு வருமாறு இளையராஜா அவர்களை அன்புடன் நான் அழைக்கும்போது, இளையராஜா அவருடைய தாய், தந்தை இடத்தில் பூஜை நடத்திக் கொண்டிருந்தார். நான் கூறியதும் உடனடியாக கலந்து கொள்கிறேன் என்று கூறினார்.
இப்ராகிம் ராவுத்தர் 95 சதவீத தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டத்தில் உள்ளார்கள் என்று கூறினார். தயாரிப்பாளர்களாக இருக்கும் 500 பேருக்கும் ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அவர்களது இல்லம் தேடி செல்லும் அளவுக்கு எங்களுடைய உழைப்பு இருக்கும்.
இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். ஆறாயிரம் பாடல்களுக்கு மேல் மெட்டமைத்திருக்கிறார். ஆனால், எந்த பாடலும் மற்றொரு பாடலை தொடாமல் இருக்கும். அவர் ஒரு அட்சயப் பாத்திரம், அமுத ஊற்று.
1000 படங்களைத் தொட்ட அவரது சாதனையைப் பாராட்டும் விதமாக அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் மிகப்பெரிய விழாவாக எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இந்தியாவில் இதுபோன்ற ஒரு விழா நடத்தியிருக்க முடியாது என்கிற அளவுக்கு அது பிரம்மாண்டமாக இருக்கும்," என்றார்.