Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை சன்னி லியோன் படப்பிடிப்பில் திடீர் சண்டை.. இயக்குனர் அதிர்ச்சி.. படப்பிடிப்பு ரத்து!
மும்பை: நடிகை சன்னி லியோன் கலந்துகொண்ட படப்பிடிப்பில் திடீர் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை சன்னி லியோன், இந்தியில் அனாமிகா என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இதை பிரபல இந்திப் பட இயக்குனர் விக்ரம் படம் இயக்கி வருகிறார். இதன் ஷூட்டிங் மும்பை அருகே நடந்து வருகிறது.
ஸ்டன்ட் இயக்குனர்
சில நாட்களுக்கு முன் சன்னி லியோன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு கொண்டிருந்தன. அப்போது ஸ்டன்ட் யூனியனை சேர்ந்த சிலர் செட்டுக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பிரபல ஸ்டன்ட் இயக்குனர் அப்பாஸ் அலி மொகுலுக்கு கொடுக்க வேண்டிய ரூ.38 லட்சத்தை கொடுக்குமாறு விக்ரம் பட்டிடம் கேட்டனர்.
ஷூட்டிங் நின்றது
இதனால் படப்பிடிப்பு தடைபட்டு பரபரப்பானது. இதையடுத்து அவர், நடிகை சன்னி லியோனை பத்திரமாக கேரவனுக்குள் அழைத்து சென்றுவிட்டார். பிறகு அவர்களிடம், காசோலை தருகிறேன் என்று இயக்குனர் சொன்னார். அதை வாங்குவதற்கு சிலர் வந்தனர். அதற்குள் லைட் இல்லை என்பதால் ஷூட்டிங் நின்றது.
அதிர்ச்சி அடைந்தேன்
இதுபற்றி விக்ரம் பட் கூறும்போது, சிலர் திடீரென்று செட்டுக்குள் புகுந்து இப்படி சொன்னதும் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உடனடியாக சன்னி லியோனை, பத்திரமாக கேரவனுக்குள் அனுப்பிவிட்டேன். ஸ்டன்ட் இயக்குனர் அப்பாஸ் அலிக்கு நான் கொடுக்க வேண்டியது 13 - 14 லட்சம் ரூபாய்தான்.
ஏற்க முடியாது
ஆனால், அவர்கள் ரூ.38 லட்சம் என்கிறார்கள். இதனால் காசோலையை போட்டோ எடுத்து அவருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்களுக்குள் எந்த ஒப்பந்தமும் இல்லை. செட்டுக்கு ஆட்கள் வருவார்கள் என்று ஸ்டன்ட் இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து, தகவல் கூட தெரிவிக்கவில்லை. படப்பிடிப்பில் வந்து தகராறில் ஈடுபட்டதை ஏற்க முடியாது' என்றார்.
பாலிவுட் பரபரப்பு
இந்நிலையில், ஸ்டன்ட் இயக்குனர் அப்பாஸ் அலியிடம் இதுபற்றி கேட்டபோது, அதை ஸ்டன்ட் இயக்குனர்கள் சங்கம் பார்த்துக் கொள்ளும் என்றார். இதற்கிடையே, இயக்குனர் விக்ரம் பட, அவர் மீது வழக்குத் தொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை சன்னி லியோன் கலந்துகொண்ட படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.