Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சல்மான் கானை சப்புன்னு அறைந்தேன்: சாமியார் பரபர பேட்டி
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் வைத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை கன்னத்தில் அறைந்ததாக சாமியார் ஸ்வாமி ஓம் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியின் 10வது சீசனை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் ஒரு வீட்டில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.
அவர்களின் செயல்கள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாமியார் ஸ்வாமி ஓம் வெளியேற்றப்பட்டார்.
சிறுநீர்
பிக் பாஸ் வீட்டில் ரகளை செய்த ஸ்வாமி ஓம் ஒரு கட்டத்தில் தனது சிறுநீரை சக போட்டியாளர்களான பானி ஜே மற்றும் ரோஹன் மெஹ்ரா மீது தெளித்தார். இதை பார்த்த சல்மான் கான் கடுப்பாகி ஸ்வாமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்.
சல்மான்
அநாகரீகமாக நடந்து கொண்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்வாமி ஓம் இந்தி செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிக் பாஸ் வீட்டின் புகைப்பிடிக்கும் அறையில் வைத்து நான் சல்மான் கானை கன்னத்தில் அறைந்தேன் என்றார்.
ஸ்வாமி ஓம்
ஸ்வாமி ஓம் விளம்பரத்திற்காக பல பேட்டிகள் கொடுப்பவர் என பெயர் எடுத்துள்ளார். அதனால் அவர் சல்மானை அறைந்ததாக கூறுவதும் விளம்பரத்திற்கே என்று கூறப்படுகிறது.
கோபம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு சல்மான் கான் தனது வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்துள்ளார். ஆனால் அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கவில்லை என்பதை அறிந்த சல்மான் கோபத்தில் உள்ளாராம்.