Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எனக்கு திகார் நினைவு வந்துடுச்சு, வீட்டுக்குப் போறேன்: பிக் பாஸிடம் அழுத ஸ்ரீசாந்த்
பனாஜி: பிக் பாஸ் வீட்டில் உள்ள கன்ஃபெஷன் அறையில் அழுதுள்ளார் ஸ்ரீசாந்த்.
சூதாட்ட வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
வீட்டிற்குள் சென்றதில் இருந்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
தண்டனை
பிக் பாஸ் வீட்டில் விதிமுறைகள் மீறினால் தண்டனை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி விதிகளை மீறிய ஸ்ரீசாந்த் பாத்திரம் கழுவ வேண்டும் என்ற தண்டனை அளிக்கப்பட்டது. அவருன் பாத்திரம் கழுவினார். ஆனால் பாத்திரம் கழுவிய பிறகு அவர் பயங்கர எமோஷனலாகி அழுதுவிட்டார். நான் பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று தெரிவித்தார்.
ஸ்ரீசாந்த்
ஸ்ரீசாந்த் அழுததை பார்த்த பிக் பாஸ் அவரை கன்ஃபெஷன் அறைக்கு வருமாறு கூறினார். அந்த அறைக்கு சென்ற ஸ்ரீசாந்த் பாத்திரம் கழுவியபோது திகார் சிறையில் பாத்திரம் கழுவிய பழைய நினைவு எல்லாம் திரும்பி வந்ததாக பிக் பாஸிடம் கூறி மீண்டும் அழுதார். இதற்காக எல்லாம் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என்று கூறி பிக் பாஸ் அவரை சமாதானம் செய்து வைத்தார்.
சூதாட்டம்
பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அவ்வப்போது ஒன்று கூடி ஸ்ரீசாந்தை கலாய்க்கிறார்கள். இதனால் அவர் கோபப்படுகிறார். அவர் டென்ஷன் ஆவதை பார்த்து வெளியே இருக்கும் அவரின் மனைவி வேதனைப்படுகிறார். யாராவது என் கணவரை சூதாட்டக்காரர் என்று கூறினால் கேஸ் போடுவேன் என்று எச்சரித்துள்ளார்.
ஆதரவு
பிக் பாஸ் 11 டைட்டிலை வென்ற ஷில்பா ஷிண்டே ஸ்ரீசாந்துக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் ஷில்பா ஷிண்டேவை பயங்கரமாக கலாய்த்துள்ளனர். ஸ்ரீசாந்தின் கோபம் தெரிந்தும் அவரை போய் ஆதரிக்கிறீர்களே என்று ஷில்பாவின் ரசிகர்களே அவரை திட்டியுள்ளனர்.