Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
யார் சொல்லி வனிதா இப்படி ஆடுகிறார்?: ரகசியம் சொன்ன பாத்திமா பாபு
Recommended Video
சென்னை:
பிக் பாஸ் 3 வீட்டில் வனிதா ஏன் மோசமாக நடந்து கொள்கிறார் என்று பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருப்பவர்களில் அதிகமாக ஃபோகஸில் இருப்பவர் வனிதா விஜயகுமார் தான். இது என்ன வனிதா வீடா, பிக் பாஸ் வீடா என்று சந்கேம் ஏற்படும் அளவுக்கு அவர் ஆதிக்கம் உள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்ட பாத்திமா பாபு போட்டியாளர்கள் பற்றி சில சுவாரஸ்யங்களை தெரிவித்துள்ளார். பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
பாத்திமா பாபு
பிக் பாஸ் வீட்டில் என் நிஜ குணத்தை மக்கள் பார்த்துள்ளனர். ஒருவரை புரிந்து கொள்ள 2 வாரம் போதாது. பிக் பாஸ் வீட்டில் நான் என் கோபத்தை காட்டவே இல்லை. நான் கோபப்பட்டால் பயங்கரமாக கத்துவேன். இதெல்லாம் பிக் பாஸ் வீட்டில் நான் செய்யவில்லை. ஏனென்றால் நான் கோபப்படும்படி எதுவும் நடக்கவில்லை.
வனிதா
வனிதாவுக்கு வாழ்க்கை பற்றிய புரிதல் குறைவு. ஆனால் தனக்கு அனைத்தும் தெரியும் என்று நினைப்பதால் பிரச்சனை ஏற்படுகிறது. அவரை நினைத்து வருத்தப்படுகிறேன். பிற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரின் நண்பர்கள் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று வனிதாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர் என்று நினைக்கிறேன்.
அறிவுரை
அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும். அப்பொழுது தான் உன்னை அதிக நேரம் காட்டுவார்கள் என்று அந்த நண்பர்கள் வனிதாவிடம் சொல்லியிருக்கிறார்கள் போன்று. கேமராவுக்கு பின்னால் அவரிடம் நன்றாக பழகினால் அவரும் நல்லபடியாக பேசுகிறார். ஆனால் கவனத்தை ஈர்க்க கேமராவுக்கு முன்பு வேறு மாதிரி ஆகிவிடுகிறார். கவனத்தை ஈர்க்கவே அவர் கிசுகிசுக்களை உருவாக்குகிறார். புறம் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறார். அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.
மீரா மிதுன்
மீரா ஒரு நாள் காலை தியானம் செய்தார். அது எந்த வகையான தியானம் என்று சேரன் கேட்டார். அதற்கு அவர் நான் பலவகை தியானம் செய்வேன், சத்குருவுடன் சேர்ந்து தியானம் செய்திருக்கிறேன் என்றார். சத்குருவுடன் சேர்ந்து தியானம் செய்ததாக அவர் பொய் சொல்லியுள்ளார். அவர் தன்னை பற்றி அனைவரும் பெருமையாக நினைக்க வேண்டும் என்று பொய் சொல்கிறார். அவர் தன் புகழ்பாடி பெருமைப்படுவதால் மற்ற போட்டியாளர்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்கிறார் பாத்திமா பாபு.