Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிக் பாஸ் 3-க்கு தடை விதிக்கக் கோரி நாகர்ஜுனா வீட்டின் முன்பு மாணவர்கள் போராட்டம்
ஹைதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நடிகர் நாகர்ஜுனாவின் வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் இன்று துவங்குகிறது. அந்த நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஸ்வேதா ரெட்டி, காயத்ரி குப்தா ஆகியோரை அட்ஜஸ்ட் செய்யுமாறு கூறியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் இருவரும் புகார் தெரிவித்தனர். உங்களால் 100 நாட்கள் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா, உங்களை போட்டியாளர் ஆக்கினால் பாஸை எப்படி இம்பிரஸ் செய்வீர்கள் என்றெல்லாம் காயத்ரி குப்தாவிடம் கேட்டுள்ளனர். அந்த பாஸ் யார் என்று தெரிந்து கொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.
2 பெண்கள் புகார் தெரிவித்தும் நாகர்ஜுனா அமைதியாக உள்ளார். இந்நிலையில் அவர் ஏன் அமைதியாக உள்ளார் என்று கேட்டும், நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரியும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் நாகர்ஜுனாவின் வீட்டிற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிந்த ஜுபிளி ஹில்ஸ் போலீசார் விரைந்து வந்து மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். பெண்களை அவமதிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நாகர்ஜுனா எப்படி ஒப்புக் கொண்டார் என்று போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக ஸ்வேதா ரெட்டி மற்றும் காயத்ரி குப்தா ஆகியோர் அளித்த புகாரின்பேரில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு தங்களுக்கு மறுக்கப்பட்டதாக அந்த 2 பெண்களும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி வழக்கறிஞர் கே. ஜெகதீஷ்வர் ரெட்டி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது.
பிக் பாஸ் பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீர்கள், நான் ஏதாவது சொல்லிவிடப் போகிறேன். அது மோசமான நிகழ்ச்சி என்று தெரிவித்த நாகர்ஜுனா தற்போது அதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
பணம் கொடுத்தால் எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் தொகுத்து வழங்குவீர்களா நாக் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.