Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பிக் பாஸ் 3: அய்யய்யோ... அபிராமிக்கு இப்படி ஒரு பிரச்சினையா?... உண்மையை வெளியே சொன்ன பாத்திமா பாபு!
பிக் பாஸ் வீட்டில் உள்ள அபிராமி நார்மலாகவே இல்லை என பாத்திமா பாபு தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அபிராமியை பற்றிய ரகசியத்தை உடைத்து மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறார் கடந்த வாரம் எலிமினேட் ஆன பாத்திமா பாபு.
பிக் பாஸ் வீட்டிற்குள் போன வேகத்தில் முதல் ஆளாக வெளியே வந்திருக்கிறார் பாத்திமா பாபு. பிக் பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தது என்பதை அறிய, ஒட்டுமொத்த மீடியாக்களும் பாத்திமா பாபு வீட்டின் முன்பு தான் கூடாரம் அமைத்திருக்கின்றன.
ஒரு இணையதள ஊடகத்திடம் வாய் மலர்ந்திருக்கிறார் அவர்.
Bigg Boss 3 அய்யய்யோ யாராவது லாஸ்லியாவை காப்பாத்துங்க: கதறும் ரசிகர்கள்
பாத்திமா கொடுத்த ஷாக்
பாத்திமா பாபு வெளியிட்ட விஷயங்களில் மிகவும் முக்கியமானது, அபிராமியை பற்றியது. அதாவது முதல் நாளில் இருந்தே அபிராமியின் நடவடிக்கைகள் நார்மலாக இல்லையாம். தனது நகத்தை வைத்து தன்னை தானே கீறிக்கொண்டாராம். மேலும் தான் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என திடீர் திடீர் என்று அழுது புலம்புகிறாராம்.
அபிராமி சரியில்லை
பாத்திமா பாபு எத்தனையோ முறை அபிராமியை சமாதானப்படுத்தி இருக்கிறாராம். மனநல மருத்துவர் வந்து கவுன்சிலிங் கொடுத்தப் பிறகு தான் சரியாகி இருக்கிறார். அதுவும் சிறிது நேரத்திற்கு மட்டும் தான். பின்னர் வழக்கம் போல ஆரம்பித்துவிட்டார் என்கிறார் பாத்திமா பாபு.
முதல் நாளில் இருந்தே
முதல் நாள் உள்ளே நுழைந்ததும் பசி பசி என அழைந்தார் அபிராமி. பிறகு அன்றைய தினமே கவினை காதலிப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்த நாளே முகினுக்கும், தனக்கும் பிறந்த குழந்தை என ஒரு வாட்டர் பாட்டிலை வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி வந்தார். இதை பற்றி பேசப்போக தான் மதுமிதாவுக்கு அவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது.
கேப்டனாக தேர்வு
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக தேர்வாகி இருக்கிறார் அபிராமி. முதல் நாளே அவருக்கும் வனிதாவுக்கு மோதல் ஆரம்பமாகிவிட்டது. சண்டக்கோழியாக வீட்டில் சுற்றி வரும் வனிதாவிடம் அபிராமி மாட்டிக்கொள்வாரா? அல்லது ஒருநிலையில் இல்லாத அபிராமியிடம் ஹவுஸ்மேட்ஸ் சிக்கப்போகிறார்களா என பார்வையாளர் யோசித்துக்கொண்டிருக்கும் வேலையில், அபிராமி பற்றிய பாத்திமா பாபு கருத்து மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.