Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
“மீரா இல்லைனா கன்டெண்ட் கிடைக்காதே.. அதான் பிக் பாஸ் இந்த நாடகம் நடத்தியிருக்காரு”.. கஸ்தூரி தாக்கு
மீராவைக் காப்பாற்றத்தான் பிக் பாஸ் நாடகமாடியுள்ளார் என நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.
சென்னை: மீராவைக் காப்பாற்றத்தான் பிக் பாஸ் எலிமினேஷன் நாடகத்தை நடத்தி இருப்பதாக விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நேற்று எலிமினேஷன் நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் மீராவை வெளியேற்றுவது போல் போட்டியாளர்கள் நாடகம் ஆடினர். இதனால் அவரும் உருக்கமாக அழுதார். பின்னர் அது நாடகம் என உண்மையை ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி இது பற்றி டிவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், '"இந்த வாரம் பிக்பாஸில் மீரா மிதுன் தான் வாக்குகளில் பின்தங்கியுள்ளார். அவர் இல்லேனா கன்டென்ட் அடிவாங்குமே. அதனால் தான் அவர் மீது மக்கள் அனுதாப அலை வீச வேண்டும் என வேண்டுமென்றே அவரை வெளியேற்றுவது போல பிராங்க் செய்யும் டாஸ்க் கொடுக்கப் பட்டுள்ளது" என விமர்சித்துள்ளார்.
ஆடியன்ஸ் வோட்டுக்களில் அபாயகரமாக பின்தங்கியுள்ள மீராவை இழக்க #BiggBossக்கு மனமில்லை- Meera இல்லேனா கன்டென்ட் அடிவாங்குமே.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 5, 2019
மீரா மீது அனுதாப அலை வீச வேண்டும் என்று திட்டமிட்டே இன்றைய டாஸ்க் கொடுக்கப்பட்டது என்று தோன்றுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. முதல் வாரம் எந்தப் போட்டியாளரும் எலிமினேட் செய்யப்படவில்லை. இந்த வாரம் தான் முதல் எவிக்சன் நடைபெற இருக்கிறது. நாமினேஷன் பிக்பாஸ் போட்டியாளர்களே செய்தாலும், வெளியேற்றப்படுவது மக்கள் போடும் ஓட்டுகள் அடிப்படையில் தான் என கூறப்படுகிறது.
இந்த வார நாமினேசன் பட்டியலில் மீரா, மதுமிதா, சேரன், கவின், சரவணன் மற்றும் பாத்திமாபாபு ஆகியோரின் பெயர் உள்ளது. இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.