Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிக் பாஸ் வீட்டில் வைத்து கைது செய்யப்படும் மீரா.. ஓ இது தான் உங்க மாஸ்டர் பிளானா பிக் பாஸ்?
பிக் பாஸ்3 வீட்டிற்குள் வைத்து போட்டியாளர் மீரா கைது செய்யப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வைத்து மீரா கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியுள்ளது. முதல் 15 போட்டியாளர்களை கமலே அறிமுகப்படுத்தி பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். அப்போதே இன்னும் இரண்டு போட்டியாளர்கள் வருவார்கள் என மறைமுகமாக கூறினார் கமல்.
அதன்படி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளன்று, 'ஸ்டைலிஷ் தமிழச்சி'யாக அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தார் மீரா மிதுன்.
குலுங்கி குலுங்கி அழுத ஜூலி.. ஆறுதல் கூறிய ஓவியா.. மறக்க முடியுமா அந்த 5 நிமிஷத்த? மிஸ் யூ ஓவியா!
மோசடி புகார்:
சமீபகாலமாக ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்ட பெயர்களில் ஒன்று மீரா மிதுன். மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவரான மீரா, அழகிப் போட்டி நடத்துவதாகக் கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது அழகிப்பட்டமும் பறிக்கப்பட்டது.
பேட்டி:
எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவி வந்த போது தான், அவர் அதிரடியாக பிக் பாஸ் போட்டியாளர் ஆகியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக அவர் மீது போலீசில் புகார் அளித்த ஜோ மைக்கேல் பல இணையதள ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை:
அப்பேட்டியில் அவர், ‘கிரிமினல் கேஸ் உள்ளவர்களை எப்படி விஜய் டிவி போட்டியாளராக தேர்வு செய்யலாம். இது அந்நிகழ்ச்சியின் சட்டதிட்டங்களுக்கு முரணானதாக உள்ளது. இந்த விவகாரத்தை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்துள்ளோம். நிச்சயம் டிஆர்பிக்காகத் தான் இப்படி அவர்கள் செய்துள்ளனர்.
மாஸ்டர் பிளான்:
விரைவில் பிக் பாஸ் வீட்டில் வைத்தே மீரா கைது செய்யப்படுவார். அப்போது நிச்சயம் ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியாகும். அது அவர்களுக்கு இலவச விளம்பரம் ஆகும். அதன் மூலம் அவர்களது டிஆர்பியும் அதிகரிக்கும். மீரா மீதும் மக்களுக்கு பரிதாபம் ஏற்படும். அது அவருக்கு சாதகமாக மாறும்' என அவர் தெரிவித்துள்ளார்.
அழுகாச்சி காவியம்:
மீராவும் அதேபோல் பிக் பாஸ் வீட்டில் வைத்து கைது செய்யப்படுவார் என்கிறார் ஜோ. ஏற்கனவே வாண்டடாக பல பிரச்சினைகளில் தலையிட்டு, நிகழ்ச்சிக்கு நிறைய கண்டண்டுகள் கொடுத்து வருகிறார் மீரா. இந்த சூழ்நிலையில் அவர் கைது செய்யப்பட்டால், அப்போது மீரா ஒரு அழுகாச்சி காவியத்தை அரங்கேற்றவும் வாய்ப்புகள் அதிகம்.
எதிர்பார்க்கலாம்:
மீரா மீது 3 காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது. விசாரணைக்காக போலீசார் தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்தார் மீரா. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது சத்தமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் அவர் போட்டியாளராகி இருக்கிறார். விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலால், வரும் நாட்களில் பிக்பாஸில் பல பரபரப்பான சம்பவங்கள் நடக்கும் என நாம் எதிர்பார்க்கலாம்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்