Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
என்னது பிக் பாஸ் வீட்ல எம்.ஜி.ஆரா... இத்தனை நாளா இதை கவனிக்காமா விட்டுட்டோமே!
பிக் பாஸ் போட்டியாளர் முகென் தன்னைத் தானே எம்.ஜி.ஆர் என்று தான் அழைத்துக் கொள்கிறார்.
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டில் எம்.ஜி.ஆரும் இருப்பதை நம்மில் எத்தனை பேர் இத்தனை நாளில் கவனித்தார்கள் என்பது தெரியவில்லை.
பிக் பாஸ் சீசன் 3ல் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் இந்த வாரம் பாத்திமா பாபு வெளியேறி விட்டார். தற்போது 15 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இவர்களில் மலேசியாவைச் சேர்ந்த முகெனும் ஒருவர். இவரது முழுப்பெயர் முகென் ராவ்.
இப்பெயரைச் சுருக்கி, தன்னைத் தானே அவர் எம்.ஜி.ஆர் என்று தான் கூறிக் கொள்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே அப்படித்தான் தன்னை அவர் சக போட்டியாளர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், அது அப்போது மக்கள் மனதில் அவ்வளவாகப் பதியவில்லை.
ரசிகர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது ஏன்?: விஜய் சேதுபதி விளக்கம்
இந்நிலையில் தற்போது மீண்டும் சாண்டி பேச்சு மூலம் அவரது பெயர் எம்.ஜி.ஆர் என்பது மக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது. ஆனால், போட்டியாளர்கள் யாரும் அவரை அப்படி அழைப்பதில்லை. தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இனி அவர்களது ஆதரவு முகெனுக்கு கிடைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் அதிகம் சர்ச்சைகளில் சிக்காமல், சமத்துப் பிள்ளையாகத் தான் வலம் வருகிறார் முகென். அவரிடம் நட்பு வைத்துக் கொள்ள, அபி, மீரா மற்றும் லாஸ்லியா ஆகியோர் முயற்சித்து வருகின்றனர். முதல் சீசனில் ஆரவ் இருந்தது போலவே, அமைதியாக இருந்து கடைசியில் டைட்டிலை தட்டிச் செல்லும் வாய்ப்புக்கூட முகெனுக்கு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.