Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Bigg boss 3 tamil: பிக் பாஸ் வீட்டில் மீண்டும் போலீஸ்... மீரா மிதுனிடம் துருவித்துருவி விசாரணை!
பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்துள்ள போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை நடத்தினர்.
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீரா மிதுனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் மிகவும் முக்கியமானவர் மீரா மிதுன். காரணம் வனிதாவுக்கு பிறகு இவர் தான் டிஆர்பிக்கு கேரன்டி தந்துகொண்டிருக்கிறார்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்னே மீரா மிதுன் மீது சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன. சர்ச்சைக்கு பெயர்போன மீரா, மின் சவுத் இந்தியா பட்டத்தை தவறாக பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு.
இதுபோல் அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காகவே மீரா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் என்ற பேச்சும் உள்ளது.
மீராவின் தாய் உயர் நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றுள்ளார். எனவே அவர் மீதான கைது நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை எழுப்பூர் போலீசார் பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பண மோசடி வழக்கு தொடர்பாக மீராவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் முன்ஜாமீன் பெற்றிருப்பதால், கைது நடவடிக்கை இருக்காது என்றே தெரிகிறது. போலீசார் வெளியே வந்த பின்னர் தான் முழு விவரமும் தெரியவரும்.